எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை', அந்த வகையில் ஒரு தவறான பாதையை நோக்கித்தான் ஓ.பி.எஸ். சென்றுகொண்டிருக்கிறார்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் அ.தி.மு.கவுக்கு அமைப்புகள் இருக்கிறதோ, அங்கிருந்து முழுமையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து ஒற்றைத் தலைமை அதுதான் அ.தி.மு.கவுக்கு தேவை என்பதை தீர்மானதித்து, அந்த ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என்று கடந்த 8 நாட்களாக பல்வேறு மாவட்டத்திலிருந்து நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அ.தி.மு.கவின் அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் 75 மாவட்ட செயலாளர்கள், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகிகள், 25 மண்டல செயலாளர்கள், அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது மேலான ஆதரவை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளனர். மேலும், ஒற்றைத் தலைமைதான் வேண்டும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அத்தீர்மானம் அவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க ஜனநாயகம் மலர்ந்த ஒரு மாபெரும் இயக்கம். இங்கு எந்த அராஜகப் போக்கும் கிடையாது. தொண்டர்கள், ஆர்வத்தோடும் எழுச்சியோடும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனவே, அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் தப்பு மேல தப்பு செய்துகொண்டிருக்கிறார். பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, அந்த வகையில் ஒரு தவறான பாதையை நோக்கித்தான் அவர் சென்றுகொண்டிருக்கிறார் என்பதை ஆழ்ந்த மனகஷ்டத்தோடு நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
எனவே, அவர் பொதுக்குழுவில் கலந்து கொண்டு, பொதுக்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம். எனவே, அங்கு எடுக்கப்படுகிற முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டாக வேண்டும். ஓ.பி.எஸ் உள்பட அனைவருமே கட்டுப்பட்டாக வேண்டும். அதுதான் தொண்டர்களின் எண்ணமும்கூட. பொதுக்குழுவில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். எனவே, அவர் கலந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


