LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : இறை நம்பிக்கையில் ஒரு நாளும் தலையிட மாட்டோம் என்றும், இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான பெட்னா அமைப்பின் 35-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது,
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் ஒட்டுமொத்தமான அமைப்பான - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான பெட்னா அமைப்பைச் சார்ந்த, அதன் அமைப்பாளர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் நீங்கள் செய்த உதவிகளை தமிழ்நாடு மறக்கவில்லை. ஏன் நானும் மறக்கவில்லை.
பெட்னாவின் 35-வது ஆண்டு விழாவில் உலகத் தமிழ்ப் பீடம் விருதையும் அளிக்க இருக்கிறீர்கள். 2020-ம் அண்டுக்கான உலகத் தமிழ்ப் பீட விருதை மறைந்த இலக்கியச் செம்மல் தமிழ்கோ இளங்குமரனாருக்கும், 2021-ம் ஆண்டுக்கான விருதை மாபெரும் தமிழ்க்கவி ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்குவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதன் பரிசுத்தொகை 15,000 அமெரிக்க வெள்ளி, அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய். இந்தச் சிறப்புக்குரிய விருது தகுதிசால் அறிஞர்களுக்கு தரப்பட இருக்கிறது.
உலகில் மூத்த இனமான தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் நாம். உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஒரு இனம் உண்டென்றால் அது தமிழினம்தான். நம்முடைய இனம் ஒரு நிலத்தில், ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் அல்ல. 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அத்தகைய தாய்வீடாம் தமிழ்நாட்டில் இருந்து என்னுடைய வாழ்த்துகளை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் நிலத்தின் தொன்மை என்பது ஏதோ பழம்பெருமையோ, இலக்கியக் கற்பனையோ மட்டுமல்ல, அது வரலாற்றுப் பூர்வமானது. இத்தகைய வரலாற்றை மீட்டெடுக்கும் காலத்தில் இந்த மாநாடு நடைபெறுவது மிக மிகப் பொருத்தமானது. கீழடியில் கிடைத்த சான்றுகள்தான், இந்த வரலாற்று வழித்தடத்தை மீண்டும் புதுப்பித்திருக்கிறது.
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக நிறுவுவதற்கு, அகழாய்வுகளும், முன்களப் புலஆய்வுப் பணிகளின் முடிவுகளும் உறுதி செய்யும்.
இந்த இனத்தின் மொழியைக் காக்க தமிழ்க் காப்புப் போராட்டங்கள் அனைத்தையும் நடத்தியது திராவிட இயக்கம்தான். ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஓராண்டு காலத்தில், தமிழ்நாட்டு அரசுத் துறை பணியிடங்களில் நுழைபவர்களுக்கு தமிழ்மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதோடு, தமிழினத்தைக் காக்கும் ஆட்சியாகவும் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் நலனிலும் அக்கறை கொண்ட ஆட்சியாக, தி.மு.க.வின் ஆட்சி அமைந்திருக்கிறது. உலகளாவிய தமிழாட்சியை இங்கிருந்து நடத்தி வருகிறோம். திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனப்பெயராக, இடப்பெயராக, மொழிப்பெயராக இருந்தது. இது ஓர் இயக்கத்தின் பெயராக கடந்த 100 ஆண்டு காலமாக இருக்கிறது. இன்று ஓர் அரசியல் தத்துவத்தின் பெயராக, ஒரு கோட்பாட்டின் பெயராக இருக்கிறது.
இந்தத் தத்துவத்திற்கு எதிரானவர்கள், இந்தக் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், திராவிட இயக்கத்தையும் எதிர்க்கிறார்கள். இந்த ஆட்சியையும் எதிர்க்கிறார்கள். திராவிடம் என்ற சொல்லையும் எதிர்க்கிறார்கள். இத்தகைய எதிரிகள் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறார்கள். இவர்களை மீறித்தான், இவர்களை எல்லாம் தாண்டித்தான் தமிழினம் வளர்ந்திருக்கிறது. எனவே இவர்களை புறந்தள்ளி நாம் வளர்வோம்.
தமிழகத்தில் இருக்கும் பிளவுகளுக்கு வெளிநாடுகள் சென்ற பிறகும் முக்கியத்துவம் தராதீர்கள். ஒருதாய் மக்களாக வாழுங்கள். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள். தமிழை, தமிழ்நாட்டை விட்டுவிடாதீர்கள். நாம் முன்னெடுக்க வேண்டிய இயக்கமானது தமிழால் இணைவோம் என்பதாகும்.
மதம் என்று நான் சொல்லும்போது, யாருடைய இறைநம்பிக்கையையும் நான் சொல்லவில்லை. இறைநம்பிக்கை என்பது அவரவர் சிந்தனை. விருப்பம். உரிமை. அதில் ஒருநாளும் தலையிடமாட்டோம். அதே நேரத்தில், தமிழர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக மதத்தைப் பயன்படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.
சாதியால், மதத்தால் தமிழர்களைப் பிரிக்கும் சக்திகள் அதிகமாகி வரும் சூழலில் நாம் அனைவரும் ஒன்றுசேர்வதற்கு, நம்மை ஒருங்கிணைக்கும் ஆற்றல் தமிழ்மொழிக்கு மட்டும்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 18 hours 3 min ago |
கடாய் வெஜிடபிள்![]() 2 days 20 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 5 min ago |
-
இந்திய லெஜண்ட்ஸ் அணி கேப்டன் ஆனார் கங்குலி
12 Aug 2022கொல்கத்தா : உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு
12 Aug 2022கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
நாட்டில் மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு : புதிதாக 16,561 பேருக்கு தொற்று
12 Aug 2022புதுடெல்லி : இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
2024-ல் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் இல்லை: பீகார் முதல்வர் நிதிஷ் திட்டவட்டம்
12 Aug 2022பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக தனக்கு 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
பதக்கம் வென்ற வீரர்களுக்கு விருந்தளிக்கிறார் பிரதமர்
12 Aug 202222-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது.
-
2022-ம் ஆண்டு சுதந்திர தின நல் ஆளுமை விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு
12 Aug 2022சுதந்திர தின நல் ஆளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
முன்கூட்டியே தொடங்குகிறது 'பிபா உலகக் கோப்பை 2022' : முதல் போட்டியில் கத்தார்-ஈகுவேடார் மோதல்
12 Aug 2022தோஹா : கத்தார் நாட்டில் வரும் நவம்பரில் தொடங்கவுள்ள பிபா உலகக்கோப்பை 2022 கால்பந்து தொடர் ஒருநாள் முன்கூட்டியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உணவுத்திருவிழா தொடக்கம்: பீப் பிரியாணி அரங்கு இல்லாதது ஏன்? அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்
12 Aug 2022சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு இல்லாதது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
-
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் தொடரும் ஆங்கிலேய ஆர்டர்லி முறை சென்னை ஐகோர்ட் நீதிபதி வேதனை
12 Aug 2022நாம் ராஜா ராணி இல்லை, நாட்டின் குடிமக்கள்தான் ராஜா, ராணிகள் என்று தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஆங்கிலேய ஆர்டர்லி முறை இன்னும் தொட
-
நாடு முழுவதும் பத்து நாட்களில் 1 கோடி தேசியக் கொடிகள் விற்பனை: மத்திய அரசு
12 Aug 202210 நாட்களில் சுமார் 1 கோடி தேசிய கொடிகளை 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: இறுதி செய்ய 17-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
12 Aug 2022சென்னை : பொறியியல் புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக, 17-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்
-
விமர்சனத்தைத் தொடர்ந்து இலவச பஸ்கள் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாற்ற நடவடிக்கை
12 Aug 2022விமர்சனத்தை தொடர்ந்து இலவச பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் வண்ணம் தீட்டும் பணியை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.
-
தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பஸ்கள் இயக்கம்
12 Aug 2022சென்னை : இன்று முதல் 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ள
-
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Aug 2022சென்னை : ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பெருங் கூட்டங்களை தவிர்க்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
12 Aug 202275-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பெரும் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
-
வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு: சென்னையில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
12 Aug 2022சென்னை : வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு குறித்து சென்னையில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
-
தமிழகத்தின் அனைத்து நகராட்சி, கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் : தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு
12 Aug 2022சென்னை : தமிழகத்தின் அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எவ்வித சாதிய பாகுபாடின்றி தேசியக்கொடியை ஏற்ற வ
-
நெல்லை அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு: மத்திய அரசு
12 Aug 2022நெல்லை : நெல்லை அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
-
உலக யானைகள் தினம்: யானைகளை பாதுகாப்போம்: : பிரதமர் நரேந்திரமோடி டுவீட்
12 Aug 2022புதுடெல்லி : உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளை பாதுகாப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி டுவீட் செய்துள்ளார்.
-
நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவால் 10 லட்சம் பேர் பசி போக்கப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 Aug 2022ஓராண்டில் நிகழ்ச்சிகளில் மீதம் இருக்கும் உணவைப் பெற்று 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
சுதந்திர தினவிழாவில் எவ்வித பாகுபாடின்றி தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் : மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
12 Aug 2022சென்னை : சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள
-
டி-20 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ வரலாற்று சாதனை
12 Aug 2022டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஆல்-ரவுண்டர் பிராவோ.
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பீகார் தொழிலாளி பலி
12 Aug 2022ஸ்ரீநகர் : காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பீகார் தொழிலாளி உயிரிழந்தார்.
-
சிறப்பு புலனாய்விற்கான மத்திய அரசின் விருது: தமிழகத்தை சேர்ந்த 5 அதிகாரிகள் தேர்வு
12 Aug 2022சிறப்பு புலனாய்விற்கான ’மத்திய உள்துறை அமைச்சக விருது 2022’ 151 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இ.பி.எஸ். உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பு கேட்டு டி.ஜ.பி. அலுவலகத்தில் புகார் மனு
12 Aug 2022சென்னை : எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.