LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் அடுத்த வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் போராட்டம் கலவரமாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில், பல்வேறு தரப்பினர் அக்னிபாத் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் அனைத்து வழக்குகளும் அடுத்த வாரத்தில் உரிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
00000000000
தங்கம் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.38,480-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 உயர்ந்து ரூ.4810-க்கு விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் 50 பைசா உயர்ந்து ரூ.64 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.500 உயர்ந்து ரூ.64,000 ஆகவும் விற்பனையானது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி) 1 கிராம் தங்கம் 4,810, 1 சவரன் தங்கம் - 38,480, 1 கிராம் வெள்ளி - 64.00, 1 கிலோ வெள்ளி 64,000.
000000000000000000
அமெரிக்காவில் விற்பனையாகும் கறிவேப்பிலையின் விலை தெரியுமா?
நம்மூர் காய்கறி கடைக்கு காய்கறி வாங்க சென்றால் அதற்கு கொசுறு போல வியாபாரிகள் கறிவேப்பிலை கொடுப்பார்கள். ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் இதற்கு 2 ரூபாய், 3 ரூபாய் காசு வாங்குவதும் உண்டு. இந்த கறிவேப்பிலைக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி உள்ளது. அமெரிக்காவில் ஒரு கட்டு கறிவேப்பிலை 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் நம்பி தான் ஆக வேண்டும். மும்பையை சேர்ந்தவர் குல்சன் சைனி. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் நம்ம ஊரில் கிடைக்கும் மளிகை பொருட்களின் விலை அமெரிக்காவில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது தொடர்பாக விளக்கி உள்ளார். அதன்படி பன்னீர் பாக்கெட் ரூ393-க்கும், வீட்டை பெருக்கும் துடைப்பம் ஒன்று ரூ 472, 92-க்கும், ஒரு கொத்து கறிவேப்பிலை இந்திய ரூபாய் மதிப்பில் 80 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக தெரிவித்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து பலர் கமாண்ட் செய்து வருகிறார்கள்.
000000000000000000000
வீட்டு கிணற்றில் மாயமான 18 அடி நீர்: அதிர்ச்சியடைந்த உரிமையாளர் புகார்
தமிழ் சினிமாவில் கிணற்றை காணோம் என்ற நடிகர் வடிவேலுவின் காமெடி போல கேரளாவில் கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரை காணவில்லை என வீட்டு உரிமையாளர் ஒருவர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்விபரம் வருமாறு:- கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த சேர்ப்பு, வெங்கினிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீசன். இவரது வீட்டின் குடிநீர் தேவைக்காக கிணறு அமைத்துள்ளார். இந்த கிணற்றின் தண்ணீரை தான் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தார். கிணற்றில் உள்ள ஊற்றுகள் மூலமும், மழை நீர் மூலமும் கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு நாளும் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை அதில் அமைக்கப்பட்டுள்ள அளவு கருவி மூலம் சதீசன் பார்ப்பது வழக்கம். அதன்படி காலையில் சதீசன் கிணற்றின் தண்ணீர் இருப்பை பார்த்தார். அதில் 18 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. மேலும் ஊற்றில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மறுநாள் காலையில் அவர் கிணற்றை பார்த்த போது கிணறு வறண்டு கிடந்தது. கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த சதீசன், இதுபற்றி மண்வளத்துறை மற்றும் புவியியல் பிரிவு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 18 hours 3 min ago |
கடாய் வெஜிடபிள்![]() 2 days 20 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 5 min ago |
-
இந்திய லெஜண்ட்ஸ் அணி கேப்டன் ஆனார் கங்குலி
12 Aug 2022கொல்கத்தா : உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு
12 Aug 2022கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
நாட்டில் மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு : புதிதாக 16,561 பேருக்கு தொற்று
12 Aug 2022புதுடெல்லி : இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
2024-ல் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் இல்லை: பீகார் முதல்வர் நிதிஷ் திட்டவட்டம்
12 Aug 2022பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக தனக்கு 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
பதக்கம் வென்ற வீரர்களுக்கு விருந்தளிக்கிறார் பிரதமர்
12 Aug 202222-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது.
-
2022-ம் ஆண்டு சுதந்திர தின நல் ஆளுமை விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு
12 Aug 2022சுதந்திர தின நல் ஆளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
முன்கூட்டியே தொடங்குகிறது 'பிபா உலகக் கோப்பை 2022' : முதல் போட்டியில் கத்தார்-ஈகுவேடார் மோதல்
12 Aug 2022தோஹா : கத்தார் நாட்டில் வரும் நவம்பரில் தொடங்கவுள்ள பிபா உலகக்கோப்பை 2022 கால்பந்து தொடர் ஒருநாள் முன்கூட்டியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உணவுத்திருவிழா தொடக்கம்: பீப் பிரியாணி அரங்கு இல்லாதது ஏன்? அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்
12 Aug 2022சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு இல்லாதது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
-
நாடு முழுவதும் பத்து நாட்களில் 1 கோடி தேசியக் கொடிகள் விற்பனை: மத்திய அரசு
12 Aug 202210 நாட்களில் சுமார் 1 கோடி தேசிய கொடிகளை 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: இறுதி செய்ய 17-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
12 Aug 2022சென்னை : பொறியியல் புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக, 17-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்
-
விமர்சனத்தைத் தொடர்ந்து இலவச பஸ்கள் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாற்ற நடவடிக்கை
12 Aug 2022விமர்சனத்தை தொடர்ந்து இலவச பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் வண்ணம் தீட்டும் பணியை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.
-
தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பஸ்கள் இயக்கம்
12 Aug 2022சென்னை : இன்று முதல் 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ள
-
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Aug 2022சென்னை : ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பெருங் கூட்டங்களை தவிர்க்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
12 Aug 202275-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பெரும் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
-
வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு: சென்னையில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
12 Aug 2022சென்னை : வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு குறித்து சென்னையில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
-
தமிழகத்தின் அனைத்து நகராட்சி, கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் : தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு
12 Aug 2022சென்னை : தமிழகத்தின் அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எவ்வித சாதிய பாகுபாடின்றி தேசியக்கொடியை ஏற்ற வ
-
நெல்லை அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு: மத்திய அரசு
12 Aug 2022நெல்லை : நெல்லை அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
-
டி-20 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ வரலாற்று சாதனை
12 Aug 2022டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஆல்-ரவுண்டர் பிராவோ.
-
உலக யானைகள் தினம்: யானைகளை பாதுகாப்போம்: : பிரதமர் நரேந்திரமோடி டுவீட்
12 Aug 2022புதுடெல்லி : உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளை பாதுகாப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி டுவீட் செய்துள்ளார்.
-
சுதந்திர தினவிழாவில் எவ்வித பாகுபாடின்றி தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் : மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
12 Aug 2022சென்னை : சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பீகார் தொழிலாளி பலி
12 Aug 2022ஸ்ரீநகர் : காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பீகார் தொழிலாளி உயிரிழந்தார்.
-
இ.பி.எஸ். உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பு கேட்டு டி.ஜ.பி. அலுவலகத்தில் புகார் மனு
12 Aug 2022சென்னை : எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக கே.லோகேஷ் ராகுல் நியமனம்
12 Aug 2022ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: சகாப்வா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
12 Aug 2022இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதற்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-13-08-2022
13 Aug 2022