முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாள் பராமரிப்பு விடுப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 270 நாள் பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 270 நாள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சட்ட ரீதியான ஒப்பந்தம் மற்றும் மருத்துவரின் சான்றிதழ் அடிப்படையாக கொண்டு இந்த விடுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தை பிறந்த நாளில் இருந்து 270 நாட்கள் இந்த விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து