முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் அணுமின் நிலையம் அருகே ஏவுகணை தாக்குதல்: 11 பேர் பலி

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      உலகம்
Ukraine 2022-08-10

Source: provided

கீவ் : ரஷ்யா ஆக்கிரமித்துள்ள ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையம் அருகே உள்ள பகுதியில் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து ராணுவ நிர்வாகத்தின் தலைவர் வெளியிட்டுள்ள டெலிகிராம் பதிவில்,   ஜபோரிஜ்ஜியா பகுதி மற்றும் தெற்கு நகரமான நிகோபோல் பகுதியிலும் ரஷ்ய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த இரு நகரங்களில் நடைபெற்ற தாக்குதல்களிலும் 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். 

பாதிக்கப்பட்ட இரண்டு பகுதிகளும் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே உள்ளன. இந்த பகுதிகளில் சமீபத்திய நாள்களில் பலமுறை தாக்குதலுக்கு உள்ளானது.  இந்த தாக்குதலில் 2 பள்ளிகள், தங்குமிடம் மற்றும் கலாசார மையம் உள்பட 20 மாடிக் கட்டிடங்கள் சேதமடைந்தன என்றார்.   

தெற்கு பகுதியில் 20 கி.மீட்டருக்கு அருகில் உள்ள அணுமின் நிலையம் தீப்பிடித்துள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து