முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Sellur-Raju 2022-08-10

Source: provided

மதுரை : எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை அ.தி.மு.க. மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தேசிய கொடியினை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. வழங்கினார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் வேண்டுகோளை ஏற்று 75 - வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. அலுவலகங்களில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசிய கொடி பறக்க விடப்படும்.

மதுரைக்கு காந்தியடிகள் வந்த பின் தான் மகாத்மா காந்தி என அழைக்கப்பட்டார். ஆளுநரை சந்தித்து ரஜினிகாந்த் அரசியல் பேசியது தொடர்பான கேள்விக்கு "ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலுக்கு வர மாட்டேன் என சொல்லி விட்டார். ரஜினிகாந்த் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாக பேசுவார்.

தி.மு.க. அரசு மீது மக்கள் கொதிப்பு அடைந்து உள்ளனர். தி.மு.க.வினர் நாடாளுமன்ற தேர்தலில் என்ன சொல்லி வாக்கு கேட்க போகிறது என தெரியவில்லை. தி.மு.க. அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை, முதியோர் உதவித் தொகை தங்கு தடையின்றி கிடைக்க முதல்வர் கருணையோடு செயல்பட வேண்டும்.

டி.டி.வி தினகரன் ஆங்கில நாளிதழ்க்கு கொடுத்த பேட்டி தொடர்பாக கேட்ட கேள்விக்கு டி.டி.வி.தினகரன் அவருடைய கருத்தை சொல்லி உள்ளார். டி.டி.வி தினகரன் பேச்சை நாங்கள் பெரிசாக எடுத்து கொள்ள போவதில்லை, சசிகலா பேச்சுக்கு நாங்கள் எந்த பதிலும் சொல்லப்போவதில்லை.

அ.தி.மு.க.வினர் கடிவாளம் கட்டிய குதிரை போல ஒரே நோக்கமாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்குவதற்கு செயல்பட்டு வருகிறோம். அ.தி.மு.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டுமே, மற்றவர்களை நாங்கள் பொறுப்படுத்துவதில்லை. அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

ஒரு சிலர் அதிமுகவில் இருந்து செல்வதால் அ.தி.மு.க.வுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடந்துள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

நிதியமைச்சர் பி.டி.ஆர் சொல்லும் குற்றச்சாடை நிரூபிக்க வேண்டும். கமிஷனுக்காக நிதியமைச்சர் பி.டி.ஆர் எங்கள் மீது குற்றச்சாட்டை சொல்கிறாரா என தெரியவில்லை. நிதியமைச்சர் பி.டி.ஆர் கமிஷன் கேட்கிறார் என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து