முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பெருங் கூட்டங்களை தவிர்க்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      இந்தியா
Central-government 2021 07

75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பெரும் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டுவிழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இது 75வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் எல்லா துறைகள் சார்ந்தும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுதந்திர தின விழாவில் பெருங் கூட்டங்களை தவிர்க்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. நாட்டில் அன்றாடம் குறைந்தது 15 ஆயிரம் பேருக்காவது புதிதாக கொரோனா தொற்று உறுதியாகிறது. இந்நிலையில் சுதந்திர தின விழாவில் பெருங்கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும், அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தினை மாவட்டந்தோறும் பிரதமான இடங்களில் மையப்படுத்தி பிரபலப்படுத்துமாறும் உள் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து