முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Yumbhagwat 2022-08-13

Source: provided

சென்னை : முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச் சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழக முதல்வரால் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அதனை செயல்படுத்தும் பொருட்டு தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் 1545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப்பள்ளி (1 முதல் 5 வகுப்பு வரை) குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 2022-2023 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்திட ஆணை வெளியிடப்பட்டது. 

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட ஏதுவாக இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர், இளம்பகவத், ஐ.ஏ.எஸ். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமித்து தக்க ஆணைகள் வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து