முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      தமிழகம்
OPS 2022-07-26

Source: provided

சென்னை : அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில்

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

தர்மத்தை நம்பினேன். மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்.   தொண்டர்களை நம்பினேன். இவையாவிற்கும் மேலாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை தற்போது உண்மையாகி இருக்கிறது. எம்.ஜி.ஆர் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அ.தி.மு.க. திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம்.

எம்.ஜி.ஆரின் திருமந்திரத்தை இதயப்பூர்வமாக ஏற்று,  நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றைக்கும் ஜெயலலிதாதான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன். கட்சியின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து