முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி பாதிப்பு சற்று உயர்வு: இந்தியாவில் 4,510 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2022      இந்தியா
India-Corona 2022 03 15

Source: provided

புதுடெல்லி : கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 5,640 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், இந்தியாவில் புதிதாக 4,510 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 72 ஆயிரத்து 980 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 5 நாட்கள் தொடர் சரிவிற்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு நேற்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 4,043 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 4,510 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 45 ஆயிரத்து 12 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 5,640 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 72 ஆயிரத்து 980 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 46,216 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்று முன்தினத்தைவிட 1,163 குறைவு ஆகும்.கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 19 மரணங்கள் உள்பட மேலும் 33 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,403 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து