முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை தர வேண்டும் : தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

Source: provided

சென்னை : அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரும் நவம்பவர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிதி நெருக்கடியால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், நிதி நெருக்கடியை காரணமாகக் கூறும் அரசு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது எப்படி? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரும் நவம்பவர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க தமிழக அரசு, போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கு உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம் அகவிலைப்படி வழங்கியது குறித்து நவம்பவர் 25ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து