முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் காவல் அதிகாரி தற்கொலை 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியான பரிதாபம்

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      உலகம்
Gun 2022-10-06

Source: provided

பாங்காக்: தாய்லாந்தின் நோங் பூவா  லாம்பூ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 22 சிறுவர்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும்  துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 34 வயதான முன்னாள் போலீஸ் அதிகாரி என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் மேலும் 12 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய காரணங்களுக்காக காவல் துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் மதிய உணவு நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்திய போது சுமார் 30 குழந்தைகள் மையத்தில் இருந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எட்டு மாத கர்ப்பிணியான ஒரு ஆசிரியர் உட்பட நான்கு அல்லது ஐந்து ஊழியர்களை அவர் முதலில் சுட்டுக் கொன்றதாக மாவட்ட அதிகாரி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து