முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிதரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்கள் : அசாம் முதல்வர் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2022      இந்தியா
Himanta-Biswa 2022-11-13

Source: provided

புதுடெல்லி : காங்கிரசில் சசிதரூருக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார். 

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடத்தப்பட்டு, அக்டோபர் 19-ம் தேதி முடிவுகள்  அறிவிக்கப்பட்டன.  இந்தத் தேர்தலில் தேர்தலில் தரூர் 1072 வாக்குகளும், கார்கே 7,897 வாக்குகளும் பெற்றனர். சசி தரூரை மல்லிகார்ஜுன கார்கே அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், காங்கிரஸின் உட்கட்சித் தேர்தல்கள் எனப்படும் தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தெரிந்து அறிவிக்கப்பட்டு விட்டது.

காங்கிரசில் உள்ள சுமார் 1,000 பிரதிநிதிகள் மட்டுமே சசி தரூருக்கு ஜனநாயக முறையில் வாக்களிக்க தைரியம் காட்டியுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து