முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேமரூனின் நிகழ்ந்த சோகம்: இறுதிச்சடங்கில் பங்கேற்ற 14 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலி

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      உலகம்
Cameron 2022-11-28

Source: provided

யவ்ண்டி : இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலியாயினர்.

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கேமரூன். இந்நாட்டின் தலைநகர் யவ்ண்டியில் உள்ள டமாஸ் மாவட்டத்தில் உயிரிழந்த நபரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. 20 மீட்டர் உயரத்திற்கு மணல் மேடு அமைந்துள்ள பகுதி அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டு மண் மேடு சரிந்து விழுந்தது. இதில், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்து மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த மண் சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மண் சரிவில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து