முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் தென்னரசு போட்டி: இ.பி.எஸ். அறிவிப்பு : ஏற்றத்திற்கான மாற்றம் என வாழ்த்து

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      தமிழகம்
EPS 2023 02 01

Source: provided

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கே.எஸ். தென்னரசுவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதே போன்று தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. சார்பில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு போட்டியிடுவார் என நேற்று காலை அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு வாழ்த்துக்கள். ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம் என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து