முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் : கோயில் நிர்வாகம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      ஆன்மிகம்
Tiruvarur 2023 02 05

Source: provided

திருவாரூர் : இந்த வருடத்திற்கான திருவாரூர் ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக புகழ்பெற்ற திருவாரூர் கோவில் ஆழித் தேரோட்டம் உலக புகழ்பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த வருடத்திற்கான ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனை முன்னிட்டு தேரோட்ட திருவிழாவிற்கு பந்தக்கால் முகூர்த்தம் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நேற்று நடைபெற்றது. முன்னதாக பந்தக்கால் தூணிற்கு சந்தனம், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து