எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட், பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவாகும் என்று முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்தார்.
ஆஸ்திரலேிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மகாராஷ்டிராவின் நாக்பூரில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டு முழுவதும் ஆடமாட்டார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா முதல் 2 டெஸ்டில் விளையாடவில்லை. முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஜடேஜா குணமடைந்துள்ளார். இதனால் அவர் ரஞ்சி டிராபியில் ஆடினார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2004-ம் ஆண்டு ரிக்கி பாண்டிங் தலைமை யிலான அணி 4 போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. அந்த அணி கடைசியாக 2017-ம் ஆண்டு இந்தியா வந்த போது 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட், பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் கூறுகையில், ஆஸ்திரேலிய அணி இந்த முறை இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றும். சொந்த மண்ணில் சிறப்பாக ஆடக்கூடிய ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் காயத்தில் உள்ளனர். இது இந்தியாவுக்கு பின்னடைவாகும். முதல் முறையாக இந்தியா சொந்த மண்ணில் வலுகுறைந்து உள்ளது. விராட் கோலியை மட்டுமே பெரிதும் நம்பி இருக்கிறது. இந்திய வீரர்கள் சொந்த மண்ணில் தந்திரங்களை பயன்படுத்துவார்கள். அதற்கு ஏற்ற வகையில் ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மாற்றி அமைக்க வேண்டும். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் ஆஸ்டன் அகருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். முன்னணி சுழற்பந்து வீரரான நாதன் லயன் தனது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். இருவரும் இணைந்து பந்து வீசினால் இந்திய பேட்ஸ்மேன்களை சமாளிக்கலாம். வார்னர் இந்தியாவில் தனது பேட்டிங் சாதனையை மேம்படுத்த வேண்டும். உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, டிரெவிஸ் ஹெட், கேமரூன் ஓயிட் ஆகியோர் பாகிஸ்தான், இலங்கையில் எதிர்கொண்டதை விட இந்தியாவில் சுழற்பந்து தரமாக இருக்கும். அவர்களுக்கு சோதனை காத்திருக்கிறது. லபுசேன் இந்திய துணை கண்டத்தில் தனது முதல் பெரிய சோதனையை எதிர்கொள்வார். ஆஸ்திரேலியா வெற்றி பெற புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்துவதே ஆஸ்திரேலியாவின் முக்கிய அம்சமாக இருக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள் ஒட்டுமொத்த திறமையும் வெளிப்படுத்த வேண்டும். இந்திய மண்ணில் வெற்றி பெறுவதற்கு திட்டமிடல், பொறுமை, விடாமுயற்சி தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


