இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள 'இளைய ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - காவஸ்கர் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை (பிப். 9) தொடங்கவுள்ளது. 4 டெஸ்ட், 3 ஒரு நாள் ஆட்டங்கள் அடங்கிய இந்தத் தொடர்களில், டெஸ்ட் எப்போதுமே முக்கியமான ஒன்று. இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் கடுமையான போட்டி என்றால் அது ஆஷஸ் தொடர்தான். அதேபோல் ஆஸி.க்கு இந்தியாவின் பார்டர் கவாஸ்கர் கோப்பை முக்கியமானது. ஏனெனில் இந்தியா ஆஸி.வை இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பிப். 9ஆம் தேதி நடைபெறும் இந்தப் போட்டிக்கு சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்டில் 15,901 ரன்களை கடந்துள்ளார். 30 சதங்களும் 4 இரட்டை சதங்களும் அடித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் இது குறித்து கூறியதாவது: இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது மலையை சாய்ப்பது போல கடினமானது. ஸ்பின் அதிகமாக இருக்கும் இந்திய மண்ணில் இந்தியாவை டெஸ்டில் வீழ்த்துவது என்பது ஆஷஸ் தொடரை வெல்வதை விடப் பெரியது.
________________
ஓய்வை அறிவித்த ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச்
2018-ல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஃபிஞ்ச், அந்த வருடத்துக்குப் பிறகு எந்தவொரு டெஸ்டிலும் விளையாடவில்லை. எனினும் ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக உள்ளார். ஃபிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி, கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். டி20யில் 3120 ரன்களை எடுத்துள்ளார்.
142.5 ஸ்டிரைக்ரேட்டுடன் விளையாடக் கூடியவர். தற்போது டி20 தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். ஃபிஞ்ச் கூறியதாவது: என்னால் அடுத்த (2024) டி20 உலகக் கோப்பை வரை விளையாட முடியாது எனத் தெரியும். இதுதான் ஓய்வை அறிவிக்க சரியான நேரம். கேப்டனாக இருக்கும்போது 2012ஆம் ஆண்டு முதன்முறையாக டி20 உலகக் கோப்பை வெல்லும்போதும், 2015இல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதும் என் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சிகள் என்பேன்.
________________
தேசிய டேபிள் டென்னிஸ்: சென்னையில் நேற்று துவக்கம்
யுடிடி 84-வது மாநிலங்களுக்கு இடையிலான யு-17, யு-19 தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று (8-ம் தேதி) தொடங்குகிறது. அணிகள் பிரிவு, தனிநபர், இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் இருந்து அணிகள் பிரிவில் 16 பேரும், சிறுவர் பிரிவில் 15 பேர், சிறுமியர் பிரிவில் 15 பேர் கலந்துகொள்கின்றனர். இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.6.6 லட்சம் ஆகும். இரு பாலருக்கான யு-19 பிரிவில் சாம்பியன் பட்டம்வெல்பவருக்கு தலா ரூ.72 ஆயிரம்மற்றும் பதக்கம் பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.36 ஆயிரமும், அரை இறுதியில் தோல்வி அடைபவர்களுக்கு ரூ.19 ஆயிரமும், கால் இறுதி சுற்றுடன் வெளியேறுபவர்களுக்கு ரூ.8 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
அதேவேளையில் இரு பாலருக்கான யு-17 பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு தலா ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இத்தகவலை தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் டி.தேவநாதன், செயலாளார் ஏ.வி.வித்யாசாகர், துணை தலைவர் முரளிதர ராவ், போட்டி ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
________________
விராட் கோலி போட்ட டுவிட்
கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் தனது புதிய தொலைபேசியை தொலைத்துவிட்டதாக ட்விட்டரில் பகிர்ந்தார். பாக்ஸை திறந்துகூட பார்க்காத நிலையில் தனது போன் தொலைத்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஜொமெட்டோ உங்கள் புதிய தொலைபேசி காணாமல் போன சோகம் மறக்க ஐஸ் கீரிம் ஆர்டர் செய்து பாருங்கள் என பதிவிட்டது. இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. இந்த டுவிட் பல எதிர்வினைகளைத் தூண்டியது. சிலர் அக்கறை காட்டினாலும், மற்றவர்கள் இது ஒரு விளம்பர வித்தையாக இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
________________
பாகிஸ்தான் சொல்வதை செய்யாது: ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு
6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு நாம் செல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆசிய கோப்பை தொடரை அங்கு நடத்தக்கூடாது என நாம் சொல்லும் போது அவர்களும் நமது இடத்துக்கு வரமாட்டோம் என்று சொல்வார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம். இது 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னிலையாக இருக்கலாம். துபாயில் பல தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு அவர் கூறினார்.
________________
தந்தையின் சாதனையை சமன் செய்த சந்தர்பால்
ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்களில் மழை பாதிப்புக்கு இடையே பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 221 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் 116 ரன்களுடனும், தேஜ்நரின் சந்தர்பால் 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த பிராத்வெய்ட்-தேஜ்நரின், தொடக்க விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் ஜோடி என்ற சிறப்பை பெற்றனர். இந்த கூட்டணி ஸ்கோர் 336-ஐ எட்டிய போது உடைந்தது. பிராத்வெய்ட் 182 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் அபாரமாக ஆடிய தேஜ்நரின் சிக்சர் அடித்து தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.
முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய 10-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 143 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 447 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. தேஜ்நரின் 207 ரன்களுடன் (467 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இவரது தந்தை ஷிவ் நரின் சந்தர்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 203 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த ஸ்கோரை தனது 3-வது டெஸ்டிலேயே கடந்து அசத்தியிருக்கிறார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளை கிழங்கு புட்டு![]() 2 days 12 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 5 days 11 hours ago |
குடைமிளகாய் பருப்பு மஸ்ரூன்![]() 1 week 2 days ago |
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு : ஐகோர்ட்டில் நாளை விசாரணை
20 Mar 2023சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
கண்ணை நம்பாதே விமர்சனம்
20 Mar 2023இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரில்லர் படத்தின் இயக்குநர் மாறனின் மற்றொரு கிரைம் திரில்லர் படம் தான் கண்ணை நம்பாதே.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-20-03-2023.
20 Mar 2023 -
இம்ரானின் கட்சியை தடை செய்ய சட்ட ஆலோசனை : பாக். உள்துறை அமைச்சர் தகவல்
20 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்ரானின் கட்சியை தடை செய்ய விரைவில் சட்ட ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் ஐ.பி.எல். போட்டி: உ.பி.வாரியர்ஸ் 3 - வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்
20 Mar 2023மும்பை : நடப்பு மகளிர் ஐ.பி.எல். போட்டியில் உ.பி.வாரியர்ஸ் குஜராத்தை வீழ்த்தி 3 - வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றியது.
-
செங்களம் பர்ஸ்ட் லுக் வெளீயீடு
20 Mar 2023செங்களம் எனும் இணைய தொடரின் பர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. எஸ். ஆர்.
-
குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ரூ. ஆயிரம் உரிமை தொகை வழங்க அண்ணாமலை வலியுறுத்தல்
20 Mar 2023சென்னை : குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ஆயிரம் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
-
ஏப்ரல் 7-ல் வெளியாகிறது ஆகஸ்ட் 16, 1947
20 Mar 2023ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் ஆகஸ்ட் 16, 1947.
-
ஷூட் தி குருவி விமர்சனம்
20 Mar 2023மங்களூரில் உள்ள கல்லூரியில் பிரபல ரவுடியான குருவி ராஜன் பற்றி மாணவர்கள் ஆராய்ச்சி செற்கிறார்கள்.
-
80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உரிமைத்தொகை திட்டத்தில் பலன் அடைய வாய்ப்பு: அமைச்சர் கீதாஜீவன்
20 Mar 2023சென்னை : உரிமை தொகை திட்டத்தில் 80 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பலனடைய வாய்ப்புள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
-
ராஜா மகள் விமர்சனம்
20 Mar 2023மகளின் ஆசையை நிறைவேற்ற படாத பாடும் ஒரு பாசத்தந்தையின் கதையே இந்த ராஜா மகள். செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடையை நடத்தி வருகிறார் ஆடுகளம் முருகதாஸ்.
-
கோஸ்டி விமர்சனம்
20 Mar 2023முழுக்க நகைச்சுவைக்கு முக்கியம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் கோஸ்டி.
-
கோபத்தில் இருந்தேன் - வரலட்சுமி
20 Mar 2023நடிகர் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் கொன்றால் பாவம்.
-
அனைத்து பெண்களுக்கும் ரூ. ஆயிரம் தருவதுதானே தி.மு.க.வின் வாக்குறுதி : உரிமைத் தொகை குறித்து இ.பி.எஸ். விமர்சனம்
20 Mar 2023சென்னை : தி.மு.க.
-
டி3 விமர்சனம்
20 Mar 2023மருத்துவர் ஒருவர் செய்யும் சட்ட விரோதமான செயல்களை புலனாய்வு செய்து வெளிக்கொண்டு வரும் ஒரு காவல் ஆய்வாளரின் அனுபவம் தான் இந்த டி3 படக்கதை.
-
2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார்: ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை : இருநாட்டு உயர்மட்ட குழு ஆலோசனை
20 Mar 2023புதுடெல்லி : ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
தமிழகத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு 144 கோடி ரூபாய் மானியம்: பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு
20 Mar 2023தமிழகத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியம் அளிப்பதற்காக வரும் நிதி ஆண்டில் ரூ.144 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நித
-
கப்ஜா விமர்சனம்
20 Mar 2023விமானப்படை வீரரான உபேந்திரா சந்தர்ப்பவசத்தால் மிகப்பெரிய
-
சூர்யகுமாருக்கு பதில் சாம்சனுக்கு வாய்ப்பு தரலாம்: வாசிம் ஜாபர்
20 Mar 2023ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி விக்கெட்டை இழந்திருந்தார் சூர்யகுமார் யாதவ்.
-
சென்னையில் 2 நாட்கள் நடைபெறுகிறது: 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
20 Mar 2023சென்னை : உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 நாட்களில் சென்னையில் நடத்தப்பட உள்ளது.
-
சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் பாகிஸ்தான் முன்னிலை
20 Mar 2023கான்பெரா : சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னிலையில் உள்ளன.
-
தமிழக பட்ஜெட் - முக்கிய அம்சங்கள்
20 Mar 2023தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று காலை தாக்கல் செய்யப்பட்டது.
-
1000 புதிய பஸ்கள் கொள்முதல்: போக்குவரத்துத் துறைக்கு ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு
20 Mar 2023சென்னை : மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திற்கு 2,800 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்திற்கு 1,500 கோடி ரூபாயும், டீசல் மானியத்திற்கு 2,000
-
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் : பட்ஜெட் உரையில் அறிவிப்பு
20 Mar 2023சென்னை : சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்தார்.
-
நிலம் வாங்குவோருக்காக பதிவுக்கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
20 Mar 2023தமிழகத்தில் நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பழனி