Idhayam Matrimony

தாய்லாந்தில் மகா புச்சா விழா: புத்தர் கோவிலில் ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றி வழிபாடு

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2023      ஆன்மிகம்
Thailand 2023 03 07

தாய்லாந்தில் மகா புச்சா விழாவை விழாவை முன்னிட்டு அங்குள்ள புத்தர் கோவிலில் ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன.  

ஒவ்வொரு ஆண்டும் 3-வது சந்திர மாதத்தின் முழு நிலவு நாளை புத்த மனத்தினர் மகா பூஜை விழாவாக கொண்டாடுகின்றனர். அந்த நாளில் புத்தர் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் புத்தரின் போதனைகளை கேட்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடுவர். 

அந்த வகையில் தாய்லாந்தில் உள்ள புத்தர் கோவிலில் துறவிகள் ஊர்வலமாக சென்று ஒரு லட்சம் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர். பலர் ஆங்காங்கு கோவில் வளாகத்தில் விளக்குகளை ஏற்றி தனியாக பிராத்தனை செய்தனர். 

புதர்களின் புனித நாள் என்பதால் நேற்று முன்தினம் தாய்லாந்தில் கடைகள் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து