முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ரூ. ஆயிரம் உரிமை தொகை வழங்க அண்ணாமலை வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Annamalai 2023 03 18

Source: provided

சென்னை : குடும்ப  அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ஆயிரம் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். 

 தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் தோறும் ஆயிரம் வழங்கப்படும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மடைமாற்றாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக  பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி தி.மு.க.வுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும் போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து 29,000 ரூபாயாக வழங்க வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். 

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல்,தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பா.ஜ.க. சார்பாக வலியுறுத்துகிறேன் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து