முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ரூ. 10 கோடி ஒதுக்கீடு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
PTR-1 2023 03 20

Source: provided

சென்னை : அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அந்த வகையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். 

அதில், விலங்குகள் நல வாரியம், மாநிலத்தில் விலங்குகளின் நலனை பேணி காக்க மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்கள் அமைப்பது அவசியமாகும். விலங்குகள் நலவாரியத்தை வலுப்படுத்தி செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு , இம்மதிப்பீட்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

விலங்குகள் இன விருத்தி கட்டுப்பாட்டு பணிகள் மேற்கொள்ளவும், உள்ளாட்சி ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கவும், விலங்குகள் நலப்பணிகளை செயல்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து