எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருவனந்தபுரம் : ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான வயநாடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வந்த ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட போவ தாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதும், வயநாடு தொகுதியின் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது. அங்கு போட்டியிட்ட ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ஆனால் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் அவர் தோல்வி அடைந்ததால் வயநாடு தொகுதி எம்.பி.யாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில்தான் 2019-ல் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்து பேசினார். இதுபற்றி குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட கோர்ட்டில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.பூர்னேஷ்மோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு நேற்று முன்தினம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கியது.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததும் மக்கள் பிரதி நிதித்துவ சட்டம் 1951-ன் படி அவரது பதவியை பறிக்க பாராளுமன்ற செயலகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து நேற்று பிற்பகல் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலகம் அறிவித்தது. ராகுல் காந்தியின் பதவி பறிபோனதால் அவரை எம்.பி.யாக தேர்வு செய்த வயநாடு தொகுதியும் காலியானது. இதுவும் பாராளுமன்ற செயலக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அடுத்த 6 மாதத்தில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி இப்போது வயநாடு தொகுதிக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அங்கு ராகுல் காந்தி போட்டியிட முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.
அதன்படி ராகுல் காந்தி 2 ஆண்டு தண்டனை பெற்றிருக்கிறார். அவர் போட்டியிட வேண்டும் என்றால் இந்த தண்டனையை மேல் கோர்ட்டு ரத்து செய்ய வேண்டும் அல்லது நிறுத்தி வைக்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியும்.
இப்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடுமா? அல்லது மேல் கோர்ட்டின் முடிவுக்கு காத்திருக்குமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு காரணம், கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவு தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. முகமது பைசல் மீதான வழக்கில் கோர்ட்டு அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கியது. கோர்ட்டு உத்தரவு வெளியானதும் உடனடியாக பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே கேரள ஐகோர்ட்டில் முகமது பைசல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து முகமது பைசலின் தண்டனையை ஐகோர்ட் நிறுத்தி வைத்தது. இதையடுத்து அங்கு நடைபெற இருந்த இடைதேர்தலும் ரத்து செய்யப்பட்டது.
இதுபோல உத்தரபிரதேசத்தின் ராம்பூர் சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ. ஆசம்கானும் ஒரு வழக்கில் தண்டனை பெற்றார். உடனே அங்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. அதற்குள் ஆசம்கான் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு மனுவின் முடிவு வரும்வரை அவரது தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. இதையடுத்து அங்கும் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் வாபஸ் பெறப்பட்டது. இப்படி பல முன்னுதாரணங்கள் இருப்பதால் ராகுல் காந்தி விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் காத்திருக்கத்தான் வாய்ப்பு உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இதுபோல பாராளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி தகுதி நீக்க அறிவிப்பில் பல சட்ட குறைபாடுகள் இருப்பதாகவும் சட்டநிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். மேல் கோர்ட்டின் முடிவை தெரிந்து கொண்ட பின்னர் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடுவதே சரியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இப்போதைய பாராளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2024) ஜூன் மாதம் 16-ந்தேதி வரை உள்ளது. அந்த வகையில் ராகுல் காந்தியின் வழக்கை காங்கிரஸ் மேல்முறையீடு செய்தால் அதன் மீதான தீர்ப்பு வெளிவர சில மாதங்கள் ஆகலாம். மேலும் லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் விவகாரத்தில் அவரது தண்டனையை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்தது போல ராகுல் காந்தியின் தண்டனையையும் ஐகோர்ட்டு நிறுத்தி வைத்தால் தேர்தல் தள்ளி போக வாய்ப்பு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.