முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே நம்பர் ஒன் பீல்டர் ஜடேஜாதான்: ஜான்டி ரோட்ஸ்

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      விளையாட்டு
Jonty-Rhodes 2023 03 30

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார். இந்நிலையில் அவரிடம் தற்சமயத்தில் உலக அரங்கில் அசத்தும் டாப் 3 ஃபீல்டர்களை பெயரிடுமாறு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மட்டும் தான் தற்போதைய நிலையில் ஒரே சிறந்த ஃபீல்டராக இருப்பதாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு., தற்போதைய நிலைமையில் ரவீந்திர ஜடேஜா மட்டும்தான் இருக்கிறார். பொதுவாக ஐபிஎல் துவங்கும் போது தான் அனைவரும் பீல்டிங் துறையில் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். இப்போதும் அனைத்து அணிகளிலும் பீல்டிங் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை. இப்போது அணியில் அனைவரும் மிகச் சிறந்த ஃபீல்டர்களாக இருக்க வேண்டும் என்ற வளர்ச்சியை நோக்கி வந்துள்ளோம். மேலும் பீல்டிங் துறையில் கவனம் செலுத்துவது அவ்வளவு கடினமானதல்ல. ஏனெனில் அது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய துறையாகும் என கூறினார்.

டெல்லி அணியில் ரிஷப்க்கு பதிலாக அபிஷேக் போரல்

கடந்த டிசம்பரில் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கிய டெல்லி அணியின் முக்கிய வீரரான ரிஷப் பண்ட் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவர் ஐபிஎல் 2023 சீசன் பங்கேற்காத நிலையில், அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பணிகளை யார் மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அந்த இடத்தை அபிஷேக் போரல் நிரப்புகிறார். 25 வயதாகும் போரல், முதல் தர கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய 26 இன்னிங்சில் 6 முறை அரைசதம் விளாசி பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் காமடைந்திருக்கும் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்க்கு பதிலாக வங்காளத்தை சேர்ந்த இளம் வீரர் அபிஷேக் போரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ள அபிஷேக் போரல், அணியின் பயிற்சி போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது அணியில் இடம்பிடித்திருக்கும் அண்கேப்ட் விக்கெட் கீப்பர்களான ஷெல்டன் ஜாக்சன், லுவ்னித் சிசோடியா, விவேக் சிங் ஆகியோருடன் அபிஷேல் போரலும் இணைந்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் மீது  மார்க் பவுச்சர் நம்பிக்கை

முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தனது ஐ.பி.எல். முதல் ஆட்டத்தில் வருகிற 2-ந்தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பெங்களூருவில் எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் கடைசி இடத்தை பெற்று விமர்சனத்திற்குள்ளான மும்பை அணி இந்த முறை எழுச்சி பெறும் உத்வேகத்துடன் தயாராகி வருகிறது. இதையொட்டி மும்பை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறுகையில்:-

அணியில் சூர்யகுமார் யாதவ் நன்றாக இருக்கிறார். அவர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவரிடம் பேசினேன். அப்போது அவர் 'நான் பந்தை நன்றாக அடித்து ஆடுகிறேன்' என்று கூறினார். அதற்கு நான், 'பதற்றமின்றி அமைதியாக இருங்கள்' என்று சொன்னேன். ஒரு வீரர் முதல் பந்தை தாண்டவில்லை என்பதற்காக அவர் நல்ல ஆட்டத்திறனுடன் இல்லை என்று சொல்ல முடியாது. துரதிர்ஷ்டவசமாக அவர் 3 ஆட்டங்களிலும் முதல் பந்திலேயே வெளியேறி விட்டார். ஐ.பி.எல்.-ல் அவர் முதல் பந்தை சந்திக்கும் போது, ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டமும் அவரை உற்சாகப்படுத்தும். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று நம்புகிறேன் என்றார்.

சச்சினின் மகனுக்கு வாய்ப்பு: பயிற்சியாளர் பவுச்சர் பதில்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளார். இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அவர் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை. நடப்பு தொடரிலாவது அவர் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாக சாத்தியமுள்ளதா என்று மார்க் பவுச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து பயிற்சியாளர் பவுச்சர் கூறும் போது., காயத்தில் இருந்து அர்ஜூன் மீண்டு வந்து அணியில் இணைந்துள்ளார். எனவே பயிற்சியில் அவரது செயல்பாடுகளை கவனிப்போம். உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 6 மாதங்களாக சிறப்பாக பந்து வீசி வருவதாக நினைக்கிறேன். எனவே முழு உடல்தகுதியுடன் அணித்தேர்வுக்கு தயாராக இருந்தால் அவரது பெயரை பரிசீலிப்போம்' என்றார்.

டோனிக்கு பதில் கேப்டன்சி: ஸ்மித் சொன்ன ருசிகர பதில்

2017 ஐபிஎல் தொடரில்தான் ஸ்டீவ் ஸ்மித் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்தபோது, ஒரு வீரராக டோனியை கேப்டன்சி செய்ய நேரிட்டது. குறிப்பாக அணி உரிமையாளர்கள் தன்னை கேப்டன்சி செய்ய வேண்டும் என்று கேட்ட போது தனக்கு பதற்றம் அதிகரித்தது என்றார் ஸ்டீவ் ஸ்மித். 2017 சீசனில் எம்.எஸ்.டோனிக்குப் பிறகு புனே அணியின் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டார். இதற்கு முந்தைய சீசனில் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 14 ஆட்டங்களில் 5ல் மட்டுமே வெற்றி பெற்று 7ம் இடத்தில் முடிந்தது. பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அந்த சீசனில் ஸ்மித் சதம் அடித்த நிலையில், காயம் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய ஸ்டீவ் ஸ்மித், கேப்டன்சியில் வளமான அனுபவம் பெற்ற எம்.எஸ்.டோனியிடமிருந்து பொறுப்பை ஏற்பது குறித்து ஆர்வமாக இருப்பதாகவும் டோனி தனக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் எவ்வாறு உதவினார் என்பதையும் எடுத்துரைத்தார் ஸ்மித். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஸ்மித் இது தொடர்பாகக் கூறிய போது, “நான் கேப்டனாக வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புவதாகக் கூற எனக்கு அழைப்பு வந்தபோது, கொஞ்சம் கடினமாக இருந்தது, ஆனால் அந்த சீசனில், எம்.எஸ்.டோனி அற்புதமாக இருந்தார். உங்களுக்குத் தெரியும், அவர் தன்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் உதவினார், அவர் ஒரு அரிதான மனிதர் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து