முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கான மருத்துவ முகாம் அமைச்சர் எ.வ. வேலு துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 25 மே 2023      தமிழகம்
E-V-VELU 2023-05-25

Source: provided

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் காக்கும் பொருட்டு பல்நோக்கு மருத்துவ முகாமை அமைச்சர்  எ.வ. வேலு துவக்கி வைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களின் உடல் நலத்தினை பேணும் பொருட்டு, காவேரி மருத்துவமனையின் உதவியுடன், பொது மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், மற்றும் உணவியல் நிபுணர்கள் மூலம் இம்முகாம் நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், அலுவலர்கள் அனைவரும் வருமுன் காப்போம் என்ற கருத்தினை மனதில் கொண்டு எந்தவித தயக்கமும் இன்றி இந்த முகாமினை பயன்படுத்தி பலன் பெறுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் பிரதீப் யாதவ், காவேரி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் அய்யப்பன் பொன்னுசாமி, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் சாந்தி, தலைமைப் பொறியாளர்கள் மற்றும்  துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து