முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம்: புறக்கணிப்பு ஏன் என பிரதமருக்கு கடிதத்தில் கெஜ்ரிவால் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      இந்தியா
Kejriwal 2023 04 14

புது டெல்லி, டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பது ஏன் என்பது குறித்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். 

 மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பினை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். துணைத் தலைவராக சுமன் பெரி இருக்கிறார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும்,  யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும் இடம் பெற்றுள்ளனர்.  

இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, இது பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்டு மாதம் 7-ம் தேதி நடைபெற்றது. இதற்கிடையே, இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. 

பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும்  கலந்து கொள்கிறார்கள். மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் சுப்ரீம் கோர்ட்டுக்கு கீழ்ப்படியவில்லை என்றால் மக்கள் நீதிக்கு எங்கே போவார்கள் என கேள்வி எழுப்புகின்றனர். கூட்டுறவு கூட்டாட்சி என்பது கேலிக்கூத்தாக இருக்கும் போது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் என்ன பயன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து