எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்து, கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துக்களில் மூன்றாவது மிகப் பெரிய ரயில் விபத்து ஆகும்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த நிலையில், யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா அதிவிரைவு ரயிலும் அங்கு விபத்துக்குள்ளானது.
மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் அதுல் கர்வால் கூறுகையில், "உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது இது மிகவும் மோசமான விபத்தாகும். விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 300 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியிருக்கிறது. ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன" என்றார்.
3-வது மிகப் பெரிய விபத்து:
கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் ஒடிசா விபத்து 3-வது மிகப் பெரிய விபத்து என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை நிகழ்ந்துள்ள மிகப் பெரிய ரயில் விபத்துகள் வருமாறு.,
1) அக்டோபர் 18, 2018: பஞ்சாப்பின் அமிர்தசரஸில் தசரா பார்வையாளர்களின் மீது ரயில் மோதிய விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2) நவம்பர் 20, 2016: உத்தரப் பிரதேசத்தின் கான்பூரிலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள புக்ராயனில் இந்தூர் - ராஜேந்திரா நகர் விரைவு ரயிலில் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 152 பேர் உயிரிழந்தனர், 250-க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்தனர்.
3) மே 28, 2010: ஹவுரா - லோகமானிய திலக் டெர்மினஸ் ஞானேஸ்வரி அதி விரைவு வண்டி, மகாராஷ்டிராவின் ஹமாசுலி மற்றும் சர்திகா இடையே சென்றபோது எதிரே வந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 140 பேர் உயிரிழந்தனர், 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
4) அக்டோபர் 29, 2005: ஆந்திரப் பிரதேச மாநிலம், வாலிகொண்டா நகரத்தில் திடீர் வெல்லத்தால் சிறிய ரயில்வே பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதால், டெல்டா பயணிகள் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 144 உயிரிழந்தனர், 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
5) செப்டம்பர் 9, 2002: பிஹாரின் கயா மற்றும் டெஹாரி ஆன் சோன் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆற்றுப்பாலத்தில், ஹவுரா ராஜ்தானி விரைவு ரயில் தடம்புரண்டு இரண்டு பெட்டிகள் ஆற்றினுள் விழுந்ததில் 140 பேர் உயிரிழந்தனர்.
6) ஆகஸ்ட் 2, 1999: மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தின் கைசால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவத் விரைவு ரயில் மீது பிரம்மபுத்ரா மெயில் வந்து மோதிய விபத்தில் குறைந்தது 285 பேர் உயிரிழந்தனர். சுமார் 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
7) நவம்பர் 26, 1998: பஞ்சாப் மாநிலம் கன்னாவில், ஃப்ரன்டியர் கோல்டன் டெம்பிள் ரயிலின் தடம்புரண்ட மூன்று பெட்டிகளின் மீது ஜம்மு தாவி-சீல்டா விரைவுரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 212 பேர் உயிரிழந்தனர்.
8) ஆகஸ்ட் 5, 1997: ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் பிரம்மாபுர் இடையே இரண்டு கோரமண்டல் விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு ரயில் ஹவுராவில் இருந்தும், மற்றொன்று சென்னையில் இருந்தும் வந்து கொண்டிருந்தன. இரண்டு ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 15, 1999-ல் துசி கிராஸிங் அருகே நாகவல்லி ஆற்றில் கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்தனர்.
9) ஆகஸ்ட் 20, 1995: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் அருகே, நின்று கொண்டிருந்த காளிந்தி விரைவு ரயில் மீது புருஷோத்தம் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 350 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலன பயணிகளில் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
10) ஜூலை 8, 1988: கேரளா மாநிலம், கொல்லம் அருகில் உள்ள அஷ்டமுடி ஏரியில் உள்ள பெருமான் பாலத்தில் சென்ற விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 106 பயணிகள் உயிரிழந்தனர். இதில் ரயிலின் 10 பெட்டிகள் நீரில் மூழ்கின.
11) ஜூன் 6, 1981: பீகார் மாநிலத்தில் பாக்மதி ஆற்றுபாலத்தை கடக்கும் போது ரயில் ஒன்று தடம்புரண்டு ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 300 பேர் உயிரிழந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 2 days 12 hours ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 5 days 15 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 1 week 2 days ago |
-
மீண்டும் மீண்டும் மோடி அரசு: பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு பா.ஜ., எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு
04 Dec 2023புதுடில்லி, 3 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை பிடித்ததை அடுத்து, லோக்சபாவுக்குள் நுழைந்த பிரதமர் மோடிக்கு, 3-வது முறையாக மோடி அரசு, மீண்டும் மீண்டும் மோடி அரசு'' என்ற கோஷம்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 04-12-2023.
04 Dec 2023 -
3 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி: பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவீன் பட்நாயக்
04 Dec 2023புதுடெல்லி, மூன்று மாநிலங்களில் பா.ஜ.க.வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.
-
தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி: முக்கிய பங்கு வகித்த அரசியல் ஆலோசகர்
04 Dec 2023ஐதராபாத் : தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து சுனில் அமைந்த தேர்தல் வியூகங்கள் காங்கிரசுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது.
-
மிக்ஜம் புயல் பாதித்த தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்: முதல்வர் ஸ்டாலினிடம் அமித்ஷா உறுதி
04 Dec 2023சென்னை : மிக்ஜம் புயல் பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உள் துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக நேற்று கேட்டறிந்தார்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால தொடர் தொடங்கியது : 19 மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது
04 Dec 2023டெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று தொடங்கி நடைபெற்றது. டிச.
-
நெல்லூர் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே மிக்ஜம் புயல் இன்று கரையை கடக்கிறது : சென்னை வானிலை மையம் தகவல்
04 Dec 2023சென்னை : வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் இன்று ஆந்திரம் அருகே நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே தீவிர புயலாக கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை
-
விராட் கோலியின் சாதனை சமன்
04 Dec 2023இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் 5 டி20 போட்டிகள் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி
-
மெட்ரோ ரயில் இயங்கும்
04 Dec 2023சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
'மிக்ஜம்' புயலால் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் தலைநகர் சென்னை : குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் தவிக்கும் மக்கள்
04 Dec 2023சென்னை : 'மிக்ஜம்' புயல் காரணமாக சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் தலைநகர் சென்னை வெள்ளநீரில் மிதக்கிறது.
-
காசாவில் இஸ்ரேல் படை தாக்குதல்: இதுவரை 15,523 பாலஸ்தீனர்கள் பலி
04 Dec 2023டெல் அவிவ் : காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 15,523 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
படிப்படியாக மழை குறையும் என அறிவிப்பு: ஆய்வு மைய தகவலால் சென்னை மக்கள் நிம்மதி
04 Dec 2023சென்னை : சென்னையில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மிசோரம் சட்டசபை தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது ஜோரம் மக்கள் இயக்கம் : 40 இடங்களில் 27 தொகுதிகளில் அமோக வெற்றி
04 Dec 2023அய்ஸ்வால் : மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையில் ஆளும் மிசோ தேசிய முன்னணி 10 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது.
-
சென்னையில் மின் விநியோகம் மீண்டும் தொடக்கம்: மின்வாரியம்
04 Dec 2023சென்னை : சென்னையில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
-
இன்று 7-ம் ஆண்டு நினைவு தினம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு மதுரை அ.தி.மு.க. சார்பில் மரியாதை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை
04 Dec 2023மதுரை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மாநகர மாவட்ட அ.தி.மு.க.
-
தேர்தல் தோல்வியின் விரக்தியை பார்லி.,யில் காட்ட வேண்டாம் : எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
04 Dec 2023புதுடெல்லி : பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக நேற்று காலை எதிர்க்கட்சிகளைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியின் விரக்தியை
-
இன்று கரையை கடக்கும் புயல்: தயார் நிலையில் ஆந்திரம்
04 Dec 2023ஐதராபாத் : ஆந்திராவை நெருங்கும் மிக்ஜம் புயல் காரணமாக தயார் நிலையில் இருக்குமாறு மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
-
கனமழை எதிரொலி: சென்னையில் இருந்து புறப்படும் 12 ரெயில்கள் முழுமையாக ரத்து
04 Dec 2023சென்னை : மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 12 ரயில்கள் முழுமையாகவும், 6 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் ரூ.4,000 கோடியில் வடிகால் அமைத்ததாக கூறும் தி.மு.க. அரசு, ரூ.4 கோடிக்கு கூட வடிகால்களை அமைக்கவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு
04 Dec 2023மதுரை : சென்னையில் 4000 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைத்ததாக கூறும் தி.மு.க.
-
சென்னையை புரட்டி போட்ட கனமழை: நிவாரணப் பணிக்கு 13 அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
04 Dec 2023சென்னை : சென்னையை புரட்டி போட்ட கனமழை காரணமாக நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த 13 அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
மிக்ஜம் புயல் மீட்பு நடவடிக்கைக்காக மதுரை மாநகராட்சி பணியாளர்கள் 400 பேர் சென்னை பயணம்
04 Dec 2023மதுரை : மதுரை மாநகராட்சியின் சார்பில் மிக்ஜம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகள் மேற்கொள்ள தூய்மை பணியாளர்களை மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணை
-
மிக்ஜம் புயலால் கனமழை: சென்னையில் பலி 5 ஆனது
04 Dec 2023செனனை : சென்னையில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
-
புழல் ஏரியிலிருந்து அதிகளவு வெளியேற்றப்படும் உபரி நீர்: தனித்தீவாய் மாறிப்போன குடியிருப்புகள்
04 Dec 2023சென்னை, சென்னையில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
மீட்பு, நிவாரண நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் : தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
04 Dec 2023சென்னை : மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
இந்தோனேசியாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை : மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி
04 Dec 2023ஜகார்த்தா : இந்தோனேசியாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலையால் மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 பேர் மட்டுமே உயிருட