Idhayam Matrimony

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி யஷோபூமி, புது ரெயில் நிலையம் திறப்பு : விஸ்வகர்மா திட்டமும் தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023      இந்தியா
Modi 2023-09-17

Source: provided

புதுடெல்லி : தனது பிறந்த நாளையொட்டி நேற்று பிரதமர் மோடி, யஷோ பூமி, புது ரயில் நிலையம் மற்றும் விஸ்வகர்மா திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். 

சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி, கலை மற்றும் கைவினை கலைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் விஸ்வகர்மா திட்டம் எனும் புதிய திட்டம் குறித்து தனது உரையில் குறிப்பிட்டார். 

இந்த நிலையில் அவர் நேற்று தனது பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். முதலில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்து சென்று யஷோபூமி துவாரகா செக்டார் 25 ரயில் நிலையம் எனும் செக்டார் 21 மெட்ரோ ரயில் நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடத்தை திறந்து வைத்தார். 

அதற்கு பிறகு, டெல்லியின் துவாரகா பகுதியில் அமைக்கப்பட்ட யஷோபூமி என பெயரிடப்பட்டிருக்கும் உலகிலேயே மிக பெரிய சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்க மையத்தையும் திறந்து வைத்தார். 

மொத்தம் 8.9 லட்சம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மையம் 1.8 லட்சம் சதுர மீட்டர் கட்டிடப்பரப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதற்கு பிறகு விஸ்வகர்மா திட்டத்திற்கான இலச்சினையையும், சின்னத்தையும், இணைய முகப்பையும் டேக்லைனுடன் துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

வரும் காலங்களில் புதிய தொழில்நுட்பங்கள் உபகரணங்கள் குறித்து உங்களுக்கு பயிற்சி தேவை. அதனை அரசு உங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் வழங்கும். இப்பயிற்சியின் போது ரூ. 500 வழங்கப்படுவதுடன் உபகரணங்களுக்கான தொகையாக ரூ. 1500 உங்களுக்கு வழங்கப்படும். 

உங்கள் பொருட்களை பெயரிடுவதிலும், சந்தைப்படுத்துவதிலும் அரசு உங்களுக்கு உதவும். நீங்கள் உங்கள் உபகரணங்களை ஜி.எஸ்.டி. பதிவு செய்யப்பட்ட கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று கூறினார். 

ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி இதில் சேரும் கலைஞர்களுக்கு அடையாள அட்டை, திறன் மேம்பாட்டு உதவி, உபகரண ஊக்கத்தொகையாக ரூ. 15,000, பிணையில்லா கடனாக முதற் பகுதியாக ரூ. ஒரு லட்சமும் பின்னர் ரூ. 2 லட்சம் ஆகியவற்றுடன் அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்திட உதவியும் வழங்கப்படும். இத்திட்டத்தில் 18 வகையான கலை மற்றும் கைவினை தொழில்கள் இடம்பெறும். 

முன்னதாக பிரதமர் மோடி இந்த புது ரயில் நிலைய சேவையை தொடங்கி வைக்க டெல்லி தவுலா குவான் ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயிலில் ஏறி பயணம் செய்தார். அதில் பயணிகளுடன் அவர் உரையாடினார். அவர் உடன் பயணம் செய்யப் போவதை எதிர்பாராத பயணிகள் ஆச்சரியத்தில் மிகவும் மகிழ்ந்தனர். அப்போது அவருக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து