எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு ரன்ரேட் மிகப்பெரிய பங்காற்றும் என்பதால் அந்த அணிகளில் எந்த 2 அணிகளும் முன்னேற வாய்ப்பு உள்ளது.
இந்தியா முதல் தகுதி...
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவடைய இருக்கின்றன. இந்தியா 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தென்ஆப்பிரிககா 8-ல் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இங்கி.,-வங்கதேசம்...
வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன. ஆஸ்திரேலியா (7-ல் 5 வெற்றி), நியூசிலாந்து (8-ல் 4 வெற்றி), பாகிஸ்தான் (8-ல் 4 வெற்றி), ஆப்கானிஸ்தான் (7-ல் 4 வெற்றி), இலங்கை (7-ல் 2 வெற்றி), நெதர்லாந்து (7-ல் 2 வெற்றி) இந்த ஆறு அணிகள் அரையிறுதி வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
ஆஸ்திரேலியா அணி...
தற்போது 10 புள்ளிகளுடன 3-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால், மற்ற அணிகளின் முடிவிற்காக காத்திருக்க வேண்டும்.
நியூசிலாந்து (4 வெற்றி)...
நியூசிலாந்து அணிக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட முடியாது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளின் வெற்றி, தோல்வி முடிவை பொறுத்து தகுதி பெற வாய்ப்புள்ளது. நியூசிலாந்து தோல்வியடைந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து அணிகள் மீதமுள்ள போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்க வேண்டும்.
பாகிஸ்தான் (4 வெற்றி)...
பாகிஸ்தான் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய நியூசிலாந்து அணியின் நிலையை போன்றதுதான். இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறுவதுடன், ரன்ரேட்டில் நியூசிலாந்தை விட அதிகம் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை இங்கிலாந்திடம் தோல்வியடைந்தால் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை அணிகள் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும்.
ஆப்கான் (4 வெற்றி)....
ஆப்கானிஸ்தான் தற்போது 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை பெற்றுவிடும். ஆனால் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றி பெறுவது அவர்களுக்கு கடினமான ஒன்று. ஆப்கானிஸ்தான் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மிகப்பெரிய வித்தியாசத்தில தோல்வியை சந்திக்க வேண்டும்
இலங்கை (2 வெற்றி)....
4 புள்ளிகளுடன் இருக்கும் இலங்கை வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று மற்ற அணிகள் மிகப்பெரிய அளவில் தோல்விகளை சந்திக்க வேண்டும். ஒரு போட்டியில் தோற்றாலும் கூட வெளியேற வேண்டியதுதான்.
நெதர்லாந்து (2 வெற்றி)...
4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து இலங்கையை போன்ற சூழ்நிலைதான். இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக விளையாட வேண்டும். இரண்டு அணிகளுக்கும் எதிராக மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவது சாத்தியமற்றதாகும். எப்படி இருந்தாலும் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு ரன்ரேட் மிகப்பெரிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற