எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக மத்திய அரசிடம் 5 ஆயிரம் கோடி ரூபாய் உடனே ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுதவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளம் பாதித்த வடசென்னை பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை பார்வையிட்டார். மழை நீர் தேங்கிய இடங்களுக்கு ஜீப்பில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அப்போது நேரு ஸ்டேடியம் வால்டாக்ஸ் சாலை அருகில் உள்ள கண்ணப்பர் திடல் பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்.
பெரியமேடு ரிப்பன் மாளிகை பகுதிக்கும் சென்று பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்துள்ளது. மீனம்பாக்கத்தில் 43 செ.மீட்டரும், பெருங்குடியில் 44 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. நாங்கள் ஏற்கனவே எடுத்த நடவடிக்கை காரணமாக பாதிப்புகள் பெருமளவு குறைந்துள்ளது.
2015-ம் ஆண்டு கடந்த ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அன்றைக்கு நுங்கம்பாக்கத்தில் 29.4 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. மீனம்பாக்கத்தில் 34.5 செ.மீ. மழை பதிவானது. இப்போது பெருங்குடியில் 46 செ.மீ. மழையும், மீனம்பாக்கம் பகுதியில் 43 செ.மீ. மழையும், 36 மணி நேரத்தில் பதிவாகி உள்ளது. இது மிக மிக அதிகம்.
இந்த புயல் விரைந்து கடந்த செல்லாமல் நின்று மெதுவாக நகர்ந்து கடந்ததால் சென்னையில் அதிக மழை பெய்தது. அதனால்தான் சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இத்தகைய மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், இந்த அரசு எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 199 பேர் இறந்தனர். நேற்று அதை விட அதிக மழை பெய்திருந்தாலும் கூட 7 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இதுவும் ஏற்பட்டிருக்கக் கூடாது. அதற்காக வருத்தப்படுகிறேன். தற்போது 9 மாவட்டங்களில் உள்ள 61666 நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
11 லட்சம் உணவு பொட்டலங்கள் இதுவரை வழங்கி உள்ளோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. காலையில் பால் பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. மழை நீர் வடிகால் நன்றாக செயல்பட்டாலும் இறுதியில் அந்த தண்ணீர் கடலில் கலக்க அடையார் மற்றும் கூவம் முகத்துவாரங்களில் புயலின் காரணமாக அவை அதிகம் காணப்பட்டதால், இந்த நதிகளில் வெள்ளம் மெதுவாக வடிந்தது.
ஆனாலும் அரசு எடுத்து வந்த பணிகளின் காரணமாக வெள்ள பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திட்டமிடாமல் அடையாறில் ஒரு லட்சம் கன அடி அளவுக்கு வெள்ள நீர் திடீரென திறந்து விடப்பட்டது. வெள்ளம் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணமாக இருந்தது. அது செயற்கை வெள்ளம். இப்போது இது இயற்கையாக ஏற்பட்டது. அதை புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த 4 நாட்களில் செம்பரம்பாக்கத்தில் இருந்த நீரை முன் கூட்டியே திட்டமிட்டு திறந்த காரணத்தால் தான் இத்தகைய பெருமழையை சமாளித்து உள்ளோம். இத்தகைய பெருமழை பெய்த நிலையிலும் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம், அடையார் ஆற்றில் தடையின்றி சென்று கடலில் கலக்க முடிந்தது.
ஆனாலும் சென்னை மற்றும் புறநகரில் ஏற்பட்ட மழை பாதிப்பை அவ்வப்போது நான் கேட்டறிந்தேன். பெரும் இயற்கை சீற்றத்தால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானாலும், ஒரு ஆட்சியின் உண்மையான கடமை என்பது இந்த இன்னல்களின் தாக்கத்தை குறைப்பதோடு அதில் இருந்து மக்கள் வெளிவர தேவையான முயற்சி மேற்கொள்வதே ஆகும்.
இந்த மழையிலும் அனைத்து தூய்மை பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் களத்தில் இயல்பு நிலை திரும்ப பணியாற்றி வருகின்றனர். அதனால் சென்னையில் இயல்பு நிலை திரும்ப தொடங்கி உள்ளது.
ரூ.4 ஆயிரம் கோடிக்கு பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் குற்றச்சாட்டை கூறி வருகிறார். நான் சொல்கிற ஒரே பதில் என்னவென்றால் இதை அரசியலாக்க விரும்பவில்லை. அவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதால் நான் சொல்ல விரும்புவது, ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு பணிகள் நடந்திருந்த காரணத்தால் தான், இவ்வளவு பெரிய வரலாறு காணாத 47 வருடமாக பார்க்காத மழையை நாம் இப்போது பார்த்திருக்கிறோம்.
அதில் இருந்து சென்னை தப்பியது என்றால் திட்டமிட்டு செலவு செய்து அந்த பணிகளை நிறைவேற்றிய காரணத்தால்தான் சென்னை தப்பி உள்ளது. அதையும் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் காலத்தில் எதுவும் செய்யவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 2 ஆண்டு காலத்தில் இந்த பணிகளை செய்துள்ளோம்.
வரலாறு காரணாத மழை வெள்ளத்தால் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது. ரோடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் மத்திய அரசிடம் 5 ஆயிரம் கோடி ரூபாய், உடனே ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுத போகிறோம்.
மக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ளனர். முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை கொடுத்ததற்கு மக்கள் நன்றாக ஒத்துழைத்தனர்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
மத கஜ ராஜா விமர்சனம்
12 Jan 2025திருமணம் ஒன்றில் தனது சிறு வயது பள்ளி நண்பர்களை சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் அனைவரும் ஒருவனால் பெரும் பிரச்சனையில் சிக்கியிருப்பது தெரிய வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-01-2025
12 Jan 2025 -
எம்.ஜி. ராயன் எழுதி இயக்கும் கள்ள நோட்டு
12 Jan 2025எம்.ஜி.ரா.
-
செக் குடியரசு ஓட்டலில் பயங்கர தீ: 6 பேர் பலி
12 Jan 2025பிராக் : வடக்கு செக் குடியரசில் உள்ள ஒரு ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
-
வாசலில் வண்ணக் கோலமிட்டு தை மகளை நாம் வரவேற்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
12 Jan 2025சென்னை : இன்பம் பொங்கும் தமிழ்நாடு என இல்லத்தின் வாசலில் வண்ணக் கோலமிட்டு, தை மகளை நாம் வரவேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்த
-
தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
12 Jan 2025சென்னை : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
வணங்கான் விமர்சனம்
12 Jan 2025இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம வணங்கான். V House Productions சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.
-
S.முருகன் தயாரிக்கும் கொஞ்சநாள் பொறு தலைவா
12 Jan 2025ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச
-
இன்று வெளியாகிறது தருணம் படம்
12 Jan 2025அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’.
-
6.1 ரிக்டர் அளவில் மெக்சிகோவில் நிலநடுக்கம்
12 Jan 2025மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் சரிவுக்கான புள்ளியாக அமையும்: திருமாவளவன்
12 Jan 2025சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் சரிவுக்கான புள்ளியாக அமையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
-
அயலக தமிழர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
12 Jan 2025சென்னை : ‘வேர்களைத் தேடி' திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், தமிழ் மொழி, கலைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு அயலக தமிழர்களுக்கு
-
உடல்நலக்குறைவால் நெல்லையப்பர் கோவில் யானை உயிரிழப்பு
12 Jan 2025நெல்லை, நெல்லையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி நேற்று உயிரிழந்தது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை
12 Jan 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.;
-
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீயில் ரூ.10,770 கோடி பங்களா நாசம்
12 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீயில் ரூ.10,770 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்று முழுமையாக எரிந்து சாம்பலானது.
-
இளைஞர்களுக்கு ஒரு நித்திய உத்வேகம்: விவேகானந்தர் பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழஞ்சலி
12 Jan 2025புதுடெல்லி : சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முன்னேற்றம்
12 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகம் பெண்களுக்கான பாதுகாப்பில் முன்னிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jan 2025சென்னை : இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அங்கோலாவில் காலரா தொற்றுக்கு 12 பேர் பலி
12 Jan 2025லுவாண்டா, அங்கோலாவில் காலரா தொற்றுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.;
-
வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
12 Jan 2025சென்னை : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவர்: விவேகானந்தர் பிறந்தநாளில் ஜனாதிபதி முர்மு புகழாரம்
12 Jan 2025புதுடெல்லி : சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
-
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா, கனடா பிரதமர் பதவிக்கு போட்டி
12 Jan 2025ஒட்டாவா : கனடா பிரதமர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா போட்டியிடுகிறார்.
-
நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும்: மக்களுக்கு இ.பி.எஸ். பொங்கல் வாழ்த்து
12 Jan 2025சென்னை : மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
காத்துவாக்குல ஒரு காதல் இசை வெளியீட்டு விழா
12 Jan 2025சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்.பா தயாரிப்பில், மாஸ் ரவி எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘காத்துவாக்குல ஒரு காதல்’.
-
இளம் மாணவர்களே இந்தியாவின் பெரிய பலம் : லண்டனில் ஓம் பிர்லா பேச்சு
12 Jan 2025லண்டன் : இன்றைய இந்தியாவின் பெரிய பலம் அதன் இளம் மாணவர்களிடம் உள்ளது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசியுள்ளார்.