முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் சகஜ நிலையை கொண்டு வர நடவடிக்கை : தலைமைச்செயலாளர் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      தமிழகம்
Shivdas-Meena 2023-12-03

Source: provided

சென்னை : சென்னையில் இயல்பு நிலையை விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறியுள்ளார்.

தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் சிவதாஸ் மீனா கூறியதாவது: 42 மணி நேரம் பெய்த மழையால் சென்னையில் பாதிப்பு ஏற்பட்டது. மழை இல்லாததால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. சில பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. 411 நிவாரண முகாம்களில் 32,188 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 4 மாவட்டங்களில் 3.5 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன.

இதுவரை 30 படகுகள் முழுமையாகவும் 90 பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளது. 139 படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஆவின் பால் விநியோகம் சரி செய்யப்பட்டு உள்ளது. நீரை பம்புகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் பணியாளர்கள் வருகை புரிந்துள்ளனர். மேலும் 2 ஆயிரம் பேர் வருவார்கள்.

சென்னையில் இயல்பு நிலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 80 சதவீத பகுதிகளில் மின்சார விநியோகம் கொடுக்கப்பட்டு உள்ளது. மழை நீர் வடிய துவங்கியதும் மற்ற பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் ஆயிரம் பம்பு செட்கள் மூலம் நீர் வெளியேற்றப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்தும் பம்பு செட்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு உள்ளது.மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கரணை, வேளச்சேரியில் படகு மூலம் உணவு பொட்டலம் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. பெட்ரோல் டீசல் விற்பனை சகஜ நிலைக்கு வந்துள்ளது. 900 விற்பனை நிலையங்களில் 805 நிலையங்களில் செயல்பாட்டில் உள்ளன. சென்னையில், 1,26,000 பால் பாக்கெட்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நகர்ப்புற நிர்வாக செயலாளர் கார்த்திகேயன் கூறுகையில், சென்னையில் நீர் தேங்கியதாக 4,183 புகார்கள் வந்துள்ளன. 138 மரங்கள் விழுந்துள்ளன; இதுவரை 91 மரங்கள் அகற்றப்பட்டு உள்ளது.ஆவடி மாநகராட்சி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது என்றார். மின்சார துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், ஆவடி, பொன்னேரி பகுதிகளில் மின் பாதைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் மின் பாதை சீரமைக்க 6203 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார். சென்னை போலீஸ் கமிஷனர், சென்னை முழுவதும் 12 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாகக் கூறினார். ஐஏஎஸ் அதிகாரி அமுதா, அதிகம் பாதிக்கப்பட்ட ஆவடி பகுதியில் இருந்து 375 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து