முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு ராவி நதி நீர் வழங்குவதை நிறுத்திய இந்தியா

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      இந்தியா
Pak 2023-02-26

ஸ்ரீநகர். இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஓடும் ராவி நதியின் குறுக்கே ஷாபூர் தடுப்பணை கட்டும் பணி, பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமானது. 45 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு சமீபத்தில் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டத்தை இந்தியா நிறுத்தி உள்ளது.

கடந்த 1960-ம் ஆண்டில் உலக வங்கியின் மேற்பார்வையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, ராவி, சட்லெஜ், பியாஸ் ஆகிய 3 நதிகள் மீதான முழு உரிமை இந்தியாவுக்கும், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய 3 நதிகள் மீதான உரிமை பாகிஸ்தானுக்கும் வழங்கப்பட்டது.

ராவி நதி இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்தாலும், இந்நதியில் இருந்து குறிப்பிட்ட அளவு நீர் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தது. எனவே, பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்தி, முழு தண்ணீரையும் இந்தியாவே பயன்படுத்தும் வகையில் ராவி நதியின் குறுக்கே ரஞ்சித் சாகர் அணை மற்றும் ஷாபூர் கண்டி தடுப்பணை கட்ட இந்தியா முடிவு செய்தது. இதற்காக 1979-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர்-பஞ்சாப் மாநில அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

1982-ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1998-ல் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2001ல் ரஞ்சித் சாகர் அணை கட்டுமானப் பணி நிறைவடைந்தது. ஆனால், ஷாபூர் கண்டி தடுப்பணை பணியில் தொய்வு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பணி நிறுத்தப்பட்டது. இதனால், ராவி நதியின் கணிசமான தண்ணீர் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது.

2008-ல் ஷாபூர் கண்டி திட்டம் தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, 2013ல் மீண்டும் கட்டுமான பணி தொடங்கியது. பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் இடையேயான மோதல் காரணமாக 2014-ல் திட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது.

பின்னர் மத்திய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து, 2018-ல் இரு மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட, கட்டுமான பணி தொடங்கி முழுமையடைந்துள்ளது. எனவே, இனி ராவி நதிநீரை இந்தியாவே முழுமையாக பயன்படுத்தும். பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டம் தடுக்கப்பட்டுள்ளதால், ஜம்மு காஷ்மீருக்கு கூடுதலாக 1,150 கன அடி தண்ணீர் கிடைக்கும் என்றும் இதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள 32 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பயன்பெறும் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து