முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 முதல் 9 வகுப்பை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு தொடங்கியது

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      தமிழகம்
School 2023 04 07

சென்னை, தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவு , திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கின.

அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் என்ற பெயரில் திறனறி தேர்வுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படு வருகிறது.  இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை  6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு,  திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் எஸ்சிஇஆர்டி இயக்குநர் ஆகிய இருவரும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

“கற்றல் விளைவு,  திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://txam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.  வினாத்தாள்களை பதிவிறக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.ஒவ்வொரு கற்றல் விளைவு,  திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வும் 40 நிமிடங்களில் நிறைவு செய்யத்தக்க வகையில் 25 கொள்குறி வகை வினாக்களைக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண்ணைக் கொண்டிருக்கும்.  ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அந்த வினா தாள்களிலேயே மாணவர்களைக் குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் குறிப்பிட்டுள்ள நாளன்று தவறாமல் நடத்த வேண்டும். இத்தேர்வுக்கான வினாக்கள் அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல்,  சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்காக வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

விடைகளை மாணவர்கள் தாங்களாகவே எழுதுவதை வகுப்பாசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்.தேர்வுக்குப் பின் வரும் கற்பித்தல் நாட்களில்,  இந்த வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள்,  வினா அமைப்பு,  தேர்வுகளில் தாள்களில் வினாவை எதிர்கொள்ளும் முறை குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஒரு முறை என 6 முதல் 9 வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு ,  திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் (Learning Outcome/ Competency Based Test) நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்‌” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  இந்த தேர்வு அரசுப் பள்ளிகளில் நேற்று தொடங்கின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து