எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : இந்திய ஜவுளி துறையின் மதிப்பு ரூ.12 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாட்டின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024ஐ திறந்து வைத்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த கண்காட்சி வருகிற 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில், நாடு முழுவதுமுள்ள ஜவுளித்துறையினர் தங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். பஞ்சு முதல் ஆடைகள் வரை அனைத்து உற்பத்தி நிலை நிறுவனங்களும், தங்கள் உற்பத்தி திறனை வெளிப்படுத்த இது வாய்ப்பாக அமைந்துள்ளது. ஜவுளித்துறை சார்ந்த இயந்திர உற்பத்தி நிறுவனங்களும் பங்கேற்கின்றன. இதில் திருப்பூரைச் சேர்ந்த 50-க்கு மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத் டெக்ஸ் 2024ஐ தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, "ஜவுளித் துறையில் நிலையான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தமது அரசாங்கத்தின் முயற்சிகளின் விளைவாக நேர்மறை தாக்கங்கள் காணப்படுவதாக தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டில், இந்திய ஜவுளி சந்தையின் மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது, இன்று, 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், நூல், துணி மற்றும் ஆடை உற்பத்தி 25% உயர்ந்துள்ளது. ஜவுளித் துறையில் தரக் கட்டுப்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது எனவும் அவர் கூறினார்.
ஜவுளித் துறையில் திறமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவித்த பிரதமர், நாடு முழுவதும் 19 நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி (NIFT) கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அருகிலுள்ள நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களும் இந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக" அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "இன்று, உலகிலேயே பருத்தி, சணல் மற்றும் பட்டு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இப்பணியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம் இலட்சக்கணக்கான பருத்தி விவசாயிகளை ஆதரித்து, அவர்களிடமிருந்து இலட்சக்கணக்கான குவிண்டால் பருத்தியை கொள்முதல் செய்கிறது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கஸ்தூரி பருத்தி இந்தியாவின் சொந்த அடையாளத்தை உருவாக்கும் முயற்சிகளில் முக்கியமானதாக இருக்கும்." என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
தி.மு.க. - பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி: த.வெ.க. பகீர் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : தி.மு.க. , பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி உள்ளதாக த.வெ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
-
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் தோல்வி : தீர்மானத்துக்கு 63 பேர் ஆதரவு - 154 பேர் எதிர்ப்பு
17 Mar 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது.
-
ஐ.பி.எல்.அணி கேப்டன்கள் கூட்டம்: பி.சி.சி.ஐ. ஏற்பாடு
17 Mar 2025மும்பை : ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளின் கேப்டன்களுடன் கூட்டம் நடத்த பி.சி.சி.ஐ. ஏற்பாடு செய்துள்ளது.
-
மும்பை வீரருக்கு நோட்டீஸ்
17 Mar 202518-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
லக்னோ அணியில் ஷர்துல் தாகூர்?
17 Mar 2025லக்னோ, மார்ச் 18-
-
எங்களை யாராலும் பிரிக்க முடியாது: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்
17 Mar 2025சென்னை : நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்.
-
உள்கட்சி பிரச்னைகளை திசைதிருப்ப சபாநாயகர் மீது அ.தி.மு.க. தீர்மானம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே பேரவைத் தலைவர் மீது அ.தி.மு.க. தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் : சிறப்பு இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்
17 Mar 2025சென்னை : தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, இதற்க
-
மும்பைக்கு எதிரான போட்டியில் எம்.எஸ்.டோனி 8-வது டவுன்: சி.எஸ்.கே. நிர்வாகம் தகவல்
17 Mar 2025சென்னை : மார்ச் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் - சி.எஸ்.கே. அணிகள் மோதுகின்றன.
-
டில்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக பிளெஸ்ஸிஸ் நியமனம்
17 Mar 2025புதுடில்லி : டில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-03-2025.
18 Mar 2025 -
சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் மார்ச் 19-ம் தேதி துவக்கம்
17 Mar 2025சென்னை : ஐ.பி.எல். 2025 தொடரின் சென்னை - மும்பை அணிகளுக்கான போட்டி மார்ச் 23-ல் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
-
ஐ.பி.எல். அணி கேப்டன்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
17 Mar 2025மும்பை : 18-வது ஐ.பி.எல். தொடரில் அணி கேப்டன்கள் பெறப்போகும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
மாஸ்டர்ஸ் லீக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 1 கோடி பரிசு
17 Mar 2025ராய்ப்பூர் : மாஸ்டர்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்பட்டது.
மாஸ்டர்ஸ் லீக்...
-
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
18 Mar 2025ராமேஸ்வரம்: எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
-
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படாமல் தடுக்க வலுவான தூதரக முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Mar 2025சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் ப
-
உ.பி. மகா கும்பமேளாவின்போது நாட்டின் பிரம்மாண்டத்தை கண்டு உலகம் வியந்தது பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
18 Mar 2025புது தில்லி: மகா கும்பமேளாவை வெற்றியடைச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மக்களவையில் தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
-
குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
18 Mar 2025சென்னை: குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர். தெரிவித்தார்.
-
பிரேமலதா விஜயகாந்துக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
18 Mar 2025சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிரேமலதா விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
-
மலையேற்ற வீரர்களால் ரூ.63.43 லட்சம் வருவாய் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
18 Mar 2025சென்னை: தமிழகத்தில் மலையேற்ற வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சாதி, மத மோதலை தூண்டும் புகைப்படங்கள்: தூத்துக்குடி, நெல்லை எஸ்.பி.க்கள் எச்சரிக்கை
18 Mar 2025தூத்துக்குடி: சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது என தூத்துக்குடி, நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கள் எச்சரித்துள்ளனர்.
-
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் துவக்கம்
18 Mar 2025சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் நேற்று தொடங்கி நடைபெற்றது.
-
தொகுதி மறுசீரமைப்பில் அநீதி: திருச்சி சிவா எம்.பி. பேச்சு
18 Mar 2025புதுடெல்லி: தொகுதி மறுசீரமைப்பில் எங்களுக்கு அநீதி இழைக்கப்படும் சூழல் உள்ளது என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்..
-
நெல்லை ஓட்டலில் ரூ.1 லட்சம் திருடிய ஊழியருக்கு 2 ஆண்டு சிறை
18 Mar 2025நெல்லை: நெல்லை தாழையூத்து அருகே ஓட்டலில் திருடிய ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் 66 ஆயிரம் ரூபாய்
18 Mar 2025சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களை அதிகம் பாதித்துள்ள நிலையில், தங்கம் விலை மீண்டும் ரூ.66 ஆயிரத்தை தொட்டுள்ளது.