எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குமரி : மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரியில் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் சிவபெருமானின் அருள் வேண்டி இங்குள்ள 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.
இதற்காக பக்தர்கள் முன்சிறை அருகேவுள்ள திருமலை மகாதேவர் ஆலயத்திலிருந்து தொடங்கி, திக்குறிச்சி மகாதேவர் ஆலயம், திற்பரப்பு வீரபத்திரர் ஆலயம், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலயம், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் ஆலயம், திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி ஆலயம், கல்குளம் நீலகண்டசாமி ஆலயம், மேலாங்கோடு காலகாலர் ஆலயம், திருவிடைக்கோடு சடையப்பர் ஆலயம், திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம், திருப்பன்றிகோடு மகாதேவர் ஆலயம், திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆலயம் ஆகிய 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் குமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த ஓட்டம் ஆன்மீகம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு முக்கிய நிகழ்வாகும்.
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். இவர்கள் காலை, மாலை வேளைகளில் குளித்து சிவன் ஆலயங்களில் சென்று சிவநாமங்களை உச்சரித்து பிரார்த்தனை செய்கின்றனர். சைவ வகை உணவுகளை மட்டுமே உண்கின்றனர்.
பின்னர் சிவராத்திரி தினத்திற்கு முந்தையை நாளில் காவி உடை தரித்து கையில் விசிறியுடன் கோபாலா, கோவிந்தா என்ற நாம கோஷத்துடன் சிவாலய ஓட்டத்தின் முதல் ஆலயமான திருமலை மகாதேவர் ஆலயத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு ஆலயமாக ஓடியவாறு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
110 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த நீண்ட ஓட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். கேரள மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பழங்காலங்களில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்துப் பக்தர்களும் ஓட்டமாகவே சென்றுள்ளனர்.
தற்போது காலமாற்றத்திற்கேற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே நடந்தும், ஓட்டமாகவும் செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் செல்கின்றனர். சிலர் இந்த ஓட்டத்தை ஒரு ஆன்மீக சுற்றுலாவாகவும் கருதி இதில் ஈடுபடுகின்றனர்.
இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் ஆலய வளாகத்திலுள்ள குளத்தில் குளித்து விட்டு ஆலயங்களுக்குள் செல்ல வேண்டுமென்பதும் தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சாமிக்கு வீசிக் கொடுக்க வேண்டுமென்பதும் ஐதீகம்.
சிவாலய ஓட்டத்தின் முதல் கோவிலான முன்சிறை மகாதேவர் ஆலயத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது. ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலம் சங்கநாராயணர் ஆலயத்தில் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது.
திருநட்டாலம் ஆலயத்தில் சுவாமி சிவன், விஷ்ணு என சங்கரநாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.
இந்த ஆண்டு சிவராத்திரி தினம் வரும் 8-ம் தேதியாக உள்ள நிலையில் மாவட்டத்தில் சிவாலயங்களுக்கு நடந்தும், ஓட்டமாகவும் செல்லும் பக்தர்கள் 7-ம் தேதி பிற்பகலில் தொடங்கி வரும் 9-ம் தேதி அதிகாலையில் நிறைவு செய்கின்றனர்.
சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் இதர வாகனங்களில் செல்லும் பக்தர்கள் வரும் 8-ம் தேதி காலையில் தொடங்கி 9-ம் தேதி அதிகாலையில் நிறைவு செய்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு திருக்கோவில்கள் நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. மேலும் கோவில் திருவிழாக் குழுக்கள், இதர கோவில் அமைப்புகள் சார்பில் ஆலயங்களிலும், இதர இடங்களிலும் சிறப்பான வரவேற்புகள் அளிக்கப்படுகின்றன. இங்கு பக்தர்களுக்கு இளைப்பாறுவதற்கான வசதியும், மோர், சுக்குநீர் மற்றும் கஞ்சி, பாயாசத்துடன் சாதம், உள்ளிட்ட உணவுகளும் இலவசமாக வழங்கப்படுன்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 5 days ago |
-
3 போட்டிகள் கொண்ட தொடர்: இந்தியா - வங்காளதேசம் இன்று முதல் டி-20 போட்டியில் மோதல்
05 Oct 2024குவாலியர் : சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா?
-
சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு 65 சதவீத நிதி வழங்க முடிவு: மத்திய அரசு அறிவிப்பு
05 Oct 2024டெல்லி, சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதியை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
ஒரே கட்டமாக 90 தொகுதிகளில் நடந்தது: அரியானா சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
05 Oct 2024சண்டிகார், அரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று 90 சட்டசபை தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் நடந்த வாக்குப்பதிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
-
தேர்தல் பத்திரங்கள் திட்டம்: தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
05 Oct 2024புதுடெல்லி : தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.
-
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
05 Oct 2024சென்னை : தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
05 Oct 2024சென்னை : தங்கம் விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.
-
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
05 Oct 2024சென்னை : ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை
-
மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி : சிறப்பு பேருந்துகள் இயக்கம்
05 Oct 2024சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும்: டிரம்ப் பேச்சு
05 Oct 2024நியூயார்க் : ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகாவில் மைசூரு, குடகு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
05 Oct 2024பெங்களூர் : கர்நாடகாவில் மைசூரு, குடகு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பினார் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
05 Oct 2024நாகை : முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் சென்ற கார் நேற்று இ.சி.ஆர். சாலையில் உள்ள கோயில் மதில் சுவற்றில் மோதியது.
-
இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டு
05 Oct 2024வாஷிம் : இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டியுள்ளார்.
-
மராட்டியத்தில் ரூ.23,300 கோடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
05 Oct 2024மும்பை : மராட்டிய மாநிலத்தில் ரூ. 23,300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு
05 Oct 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-
லெபனானில் இருந்து 97 பேரை விமானம் மூலம் மீட்ட தென் கொரியா
05 Oct 2024சியோல் : லெபனானில் பதற்றம் நிலவி வரும் சூழலில் 97 பேரை விமானம் மூலம் மீட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
-
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கைது
05 Oct 2024சென்னை : சென்னையில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
5.24 மில்லியன் டாலர் அபராதத் தொகையை தவறான வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய டுவிட்டர் நிறுவனம்
05 Oct 2024பிரேசிலியா : கோர்ட் உத்தரவுப்படி, 5.24 மில்லியன் டாலர் அபராத தொகையை செலுத்திய டுவிட்டர் நிறுவனம், அதனை தவறான வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய விவரம் வெளியாகி உள்ளது.
-
தொழில்நுட்பக் கோளாறால் விமான சேவைகள் பாதிப்பு : இண்டிகோ நிறுவனம் விளக்கம்
05 Oct 2024புதுடெல்லி : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தங்களது விமான நிலைய குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இண்டிகோ விளக்கம்
-
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: 15-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
05 Oct 2024புதுடெல்லி : வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்க
-
எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாள்: ராகுல் காந்திக்கு காங். தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து
05 Oct 2024சென்னை : நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார
-
தமிழகத்தின் வட பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பு: வடகிழக்கு பருவமழை 15-ம் தேதி தொடக்கம் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Oct 2024புதுடெல்லி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மைசூரில் இளைஞர் தசரா விழா இன்று தொடக்கம் : பாதுகாப்பு பணியில் 1,239 போலீசார்
05 Oct 2024மைசூரு : மைசூரில் இளைஞர் தசரா இன்று துவங்குகிறது. பாதுகாப்புக்காக 1,239 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
-
தொடரும் போராட்டம்: சாம்சங் தொழிலாளர்கள், நிறுவனத்துடன் 3 தமிழக அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை
05 Oct 2024சென்னை, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைந்து தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து நாளை 3 தமிழக அமைச்சர்கள் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்
-
டிசம்பரில் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம்
05 Oct 2024புதுடெல்லி : சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது.
-
மோசடி வழக்கில் கைதானவருக்கு த.வெ.க. கட்சியுடன் தொடர்பா? - கரூர் மாவட்ட தலைவர் விளக்கம்
05 Oct 2024கரூர் : மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கரூர் மாவட்ட தலைவர் விளக்கமளித்துள்ளார்.