எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய அணியின் 2023- 2024 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பி.சி.சி.ஐ. அறிவித்தது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய 2 வீரர்களை பி.சி.சி.ஐ. அதிரடியாக நீக்கியது. இந்த நடவடிக்கை இந்திய கிரிக்கெட்டில் கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பி.சி.சி.ஐ-யின் இந்த முடிவு குறித்தும், இளம் வீரர்களின் முடிவு குறித்தும் கருத்து தெரிவித்துள்ள இந்திய வீரரான விருத்திமான் சஹா கூறுகையில்.,
இது பி.சி.சி.ஐ.யின் முடிவாக இருக்கலாம். ஆனால் வீரர்களின் தனிப்பட்ட முடிவுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். பி.சி.சி.ஐ. கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது. நான் எப்போதெல்லாம் பிட்டாக இருந்திருக்கின்றேனோ அப்போதெல்லாம் கிளப் போட்டிகள், ஆபீஸ் போட்டிகள் என அனைத்திலுமே பங்கேற்று விளையாடி உள்ளேன். நான் எப்பொழுதுமே ஒரு போட்டியை போட்டியாகத்தான் பார்க்கிறேன். அது எவ்வித போட்டியாக இருந்தாலும் எனக்கு சமமாகத்தான் தெரியும். சர்வதேச போட்டிகள், உள்ளூர் போட்டிகள், கிளப் போட்டிகள் என்று எதையும் நான் பிரித்து பார்ப்பது கிடையாது என்று கூறியுள்ளார்.
____________________________________________
ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்கள் அடித்திருந்தது. கிரீன் 103 ரன்களுடனும், ஹேசில்வுட் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 4 விக்கெட்டுகளும், வில்லியம் ஒ ரூர்க் மற்றும் ஸ்காட் குகெலீஜ்ன் தலா 2 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர். இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த கிரீன் - ஹேசில்வுட் இணை மேற்கொண்டு 104 ரன்கள் அடித்து அணிக்கு வலுவூட்டினர். இவர்களில் ஹேசில்வுட் 22 ரன்களில் மேட் ஹென்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 179 ரன்களில் சுருண்டது.
பின்னர் 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுமித் முதல் ஓவரிலேயே கிளீன் போல்டு ஆனார். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆஸ்திரேலிய அணி 2-வது நாளில் 2 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்களுடன் தடுமாறி வருகிறது. உஸ்மான் கவாஜா 5 ரன்களுடனும், லயன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 217 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
____________________________________________
பிசிசிஐ-க்கு கபில்தேவ் ஆதரவு
இந்திய அணியில் இடம்பெறுவதற்கு உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும் என்ற பிசிசிஐ-ன் முடிவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வரவேற்றுள்ளார். பிசிசிஐ-ன் இந்த முடிவினால் சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிசிசிஐ-ன் இந்த புதிய முடிவினால் சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். சில வீரர்கள் காயமடைந்ததாக உணர்வார்கள். ஆனால், நாட்டுக்கு முன்பு எந்த ஒரு விஷயமும் பெரிது கிடையாது. உள்ளூர் போட்டிகளைப் பாதுகாக்க பிசிசிஐ எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பிடித்தவுடன் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை. இதனைப் பார்க்கும்போது உள்ளூர் போட்டிகளின் மதிப்பு குறைகிறது என வருத்தமாக இருக்கும். சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தங்களது மாநிலத்துக்காக விளையாடுவது இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றார். அண்மையில் வெளியிடப்பட்ட 2023-24 ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
____________________________________________
ஆஸி. வீரர் நேதன் லயன் சாதனை
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல சுழல்பந்து வீச்சாளர் நேதன் லயன் (36) 128 போட்டிகளில் விளையாடி 521 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 5 விக்கெட்டுகளை 23 முறையும் 10 விகெட்டுகளை 4 முறையும் எடுத்து அசத்தியுள்ளார். 2011இல் இல்ங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் நேதன் லயன். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடி வருகிறார். சமீபத்தில் 500 விக்கெட்டுகள் எடுத்தபோது ஆஸ்திரேலியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறினார் நேதன் லயன்.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் வீரர் கோர்ட்னி வால்ஷைப் பின்னுக்குத் தள்ளி அதிக டெஸ் விக்கெட் வரிசையில் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர்கள் அனில் கும்ப்ளே 4வது இடத்திலும் ரவி அஸ்வின் 9வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியல்: முத்தையா முரளிதரன் - 800, ஷேன் வார்னே- 708, ஜேம்ஸ் ஆண்டர்சன் - 698. அனில் கும்ப்ளே - 619, ஸ்டூவர்ட் பிராட் - 604, க்ளென் மெக்ரத் - 563, நேதன் லயன் - 521, கோர்ட்னி வால்ஷ் - 519, ரவி அஸ்வின் - 507.
____________________________________________
ஓய்வை அறிவித்தார் எராஸ்மஸ்
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நடுவராக பணியாற்றி வருகிறார். 2006-ம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றியுள்ளார்.
3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.61 வயதாகும் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார்.
____________________________________________
டெல்லி அணிக்கு 2-வது வெற்றி
மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.
இந்நிலையில், பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அபாரமாக விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 50 ரன்களும், ஆலிஸ் கேப்சி 46 ரன்களும் விளாசினர்.இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலசஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, நடப்பு தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
15 Mar 2025சென்னை : தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுதத் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-03-2025.
15 Mar 2025 -
“அவரிடமே கேளுங்கள்” செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்
15 Mar 2025சென்னை, என்னை சந்திப்பதை ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடமே சென்று கேளுங்கள் என்று செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி
-
விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.20,500 கோடி இலக்கு: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு
15 Mar 2025சென்னை, உழவர் பெருமக்கள் மகிழும் வகையில் சுமார் ரூ.45,661 கோடி அளவுக்கு வேளாண்மை பட்ஜெட் அமைந்துள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த
-
1.45 மணி நேரம் பட்ஜெட்டை வாசித்ததுதான் சாதனை; விவசாயிகளுக்கு நன்மை இல்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
15 Mar 2025சென்னை, கிட்டத்தட்ட 1.45 மணி நேரம் விவசாய பட்ஜெட்டை வாசித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.
-
வேளாண் பட்ஜெட்டில் பல முத்தான திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
15 Mar 2025சென்னை : வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக வேளாண் பட்ஜெட்-2025 தாக்கல் செய்யப்பட
-
பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்
15 Mar 2025புதுடில்லி : பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை அமைச்சர் தெரிவித்தார்.
-
30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5,242 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
15 Mar 2025சென்னை, கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் உழவர்களுக்கு 5,242 கோடி ரூபாய் பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது,” என்று வேளாண்மை மற்றும் உழவர்
-
விரைவில் பூமி திரும்புகிறார்: சுனிதா வில்லியம்சை அழைத்து வர டிராகன் விண்கலம் சென்றது
15 Mar 2025புளோரிடா, சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாத காலமாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் வில்மோர் ஆகிய
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹோலி ஊர்வலத்தில் மோதல்; கடைகளுக்கு தீ வைப்பு-பதற்றம்
15 Mar 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் நடந்த ஹோலி கொண்டாட்ட ஊர்வலத்தில் இரண்டு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பல வாகனங்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்ப
-
வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி அறிமுகம்
15 Mar 2025கலிபோர்னியா : வாட்ஸ்ஆப்பில் தனிப்பட்ட சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டும் கிரியேட் ஈவென்ட் வசதி அறிமுகமாகியுள்ளது.
-
திடீர் மின் தடையால் கியூபா இருளில் மூழ்கியது
15 Mar 2025ஹவானா, கியூபாவில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்வெட்டு காரணமாக அந்நாட்டின் பல மாகாணங்கள் இருளில் மூழ்கின.
-
இந்தியாவில் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையம்: ஸ்டார்லிங்க் நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தல்
15 Mar 2025புதுடெல்லி, உள்நாட்டில் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் எழும்போது தகவல் தொடர்பு சேவைகளை இடைநிறுத்தம் செய்வதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு மையங்களை இந்தியாவில் அமைக்க
-
ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: வரும் 18-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
15 Mar 2025புதுடெல்லி : ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தை இணைப்பது தொடர்பாக உள்துறை செயலாளருடன் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்
-
நத்தம் புளி உள்பட ஐந்து விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
15 Mar 2025சென்னை : வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை
15 Mar 2025மாஸ்கோ, உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
அசாம் மாநிலத்தில் அமைதி திரும்ப காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
15 Mar 2025டெல்லி : அசாம் மாநிலத்தில் அமைதி திரும்ப காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை எனறு அமித்ஷா பேசினார்.
-
நெல்லை த.வெ.க. மாவட்ட செயலாளர் மாரடைப்பால் மரணம்: விஜய் இரங்கல்
15 Mar 2025சென்னை, திருநெல்வேலி த.வெ.க. மாவட்ட செயலாளர் மரடைப்பால் மரணம் அடைந்தார் அவரது குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பாக். உள்ளிட்ட 41 நாடுகளுக்கு பயணத்தடைகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலனை
15 Mar 2025வாஷிங்கடன், பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 41 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு கடுமையான புதிய பயணத் தடைகள் விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக
-
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கோலாகலம்
15 Mar 2025கச்சத்தீவு : கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
மாசாணியம்மன் கோவில் நிதியில் இருந்து ரிசார்ட் கட்டுவதற்கான அரசானை வாபஸ்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
15 Mar 2025சென்னை, மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து ரூ.1.4 கோடி செலவில் ஊட்டியில் ரிசார்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து
-
வான்வழி தாக்குதலில் முக்கிய ஐ.எஸ். தலைவர் படுகொலை: ஈராக் பிரதமர் தகவல்
15 Mar 2025பாக்தாத், ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் ஸ்டேட் தலைவர் அபு கதீஜா எனும் அப்துல்லா மக்கி மொஸ்லே அல்-ரிபாய் கொல்லப்பட்டதாக ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி தெரிவித
-
20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்
15 Mar 2025சென்னை : தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
-
தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ஜாமீன் மனு தள்ளுபடி
15 Mar 2025கா்நாடகா : தங்கக் கடத்தல் வழக்கில் கைதான கன்னட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகையும் கா்நாடக காவல் துறை டி.ஜி.பி.
-
அமெரிக்காவில் விபத்து: 5 பேர் பலி
15 Mar 2025அமெரிக்கா, அமெரிக்காவில், ஹவார்ட் மற்றும் பார்மெர் இடையிலான சாலையில் டிரக் உட்பட 17 வாகனங்கள் கடந்த வியாழக்கிழமை இரவு ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.