எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பழனி : பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை நடக்கிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோயிலான திருஆவினன்குடி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கிரி வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 6 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வானபங்குனி உத்திரத் தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கிரி வீதிகளில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக வரும் 26-ம் தேதி வரை திருச்சி, மதுரை,தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழனிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025