எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை பேட்டிங்...
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று (ஏப். 22) நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.
திலக் வர்மா...
ஆரம்பம் முதலே ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் திணறினர். ரோஹித் சர்மா 6ரன்களுக்கு ஆட்டமிழக்க, இஷான் கிஷன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா மட்டும் நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். திலக் வர்மா 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த வந்த வீரரான நேஹல் வதேரா 49ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
180 ரன்கள் இலக்கு...
20ஓவர்களின் முடிவில் 9விக்கெட்கள் இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, திலக் வர்மா 45 பந்துகளில் 65 ரன்களை விளாசினார். நேஹால் வதேரா 24 பந்துகளில் 49 ரன்களை எடுத்தார். இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 18. 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை விளாசினர். அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 104 ரன்களை குவித்தார். சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். ஜோஸ் புட்டலர் 25 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார்.இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து முதலிடம்....
இதுவரை 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் தோல்வி மற்றும் ஏழு போட்டியில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது இடத்தை தக்க வைத்துள்ளது. அதேபோல 8 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 3போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6புள்ளிகளைப் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.
சஞ்சு சாம்சன் பேட்டி...
வெற்றி பெற்ற பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது., இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதற்கான அனைத்து வாழ்த்துகளும் எங்கள் அணியின் அனைத்து வீரர்களையுமே சேரும். பந்துவீச்சின் போது பவர்பிளே ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் மிடில் ஓவர்களில் இடது கை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திவிட்டனர். ஆனால் நாங்கள் திரும்பி வந்ததுடன் இந்த வெற்றியையும் பதிவு செய்துள்ளோம்.
ஓய்வு கிடைக்கும்...
நாங்கள் பேட்டிங் செய்ய வரும்போது மைதானம் மெதுவாக இருந்தாலும், விளக்குகளின் வெளிச்சத்தால் விளையாடும் போது அது பேட்டிங்கிற்கு சாதமாக அமைந்தது. தொழில்முறை வீரர்கள் தங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு யாரிடமிருந்தும் அறிவுரைகள் தேவையில்லை என நினைக்கிறேன். அவர் மிகவும் நம்பிக்கையான வீரர். இவ்வாறு அவர் கூறினார்.
ஹர்திக் பாண்ட்யா...
இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் மும்பை கேப்டன் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆரம்ப கட்டத்தில் நாங்களே சில தவறுகளை செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டோம்.ஆனால் திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை சேர்த்தார்கள். எனினும் நாங்கள் நல்ல முறையில் பேட்டிங்கை முடிக்கவில்லை குறைந்தது. 10 - 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். இதே போன்று பந்துவீச்சிலும் ஸ்டம்ப்க்கு குறி வைத்து பந்து வீசி இருக்க வேண்டும். நாங்கள் பவர் பிளேவில் அடிப்பதற்கு ஏதுவாக பந்துகளை வீசி விட்டோம். நிச்சயமாக இது எங்களுடைய சிறந்த நாள் கிடையாது. நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை இன்று மைதானத்தில் வெளிப்படுத்தவில்லை. எங்கள் அணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அது அவர்களுக்கு தெரியும்.
உடன்பாடு இல்லை...
நாங்கள் செய்யும் தவறிலிருந்து திருத்திக் கொள்ள வேண்டும். திரும்ப செய்யக்கூடாது. எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கிறது. அது குறித்து அவர்கள் உழைக்க வேண்டும். எங்கள் அணியில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என ரசிகர்கள் கேட்கிறார்கள்.ஆனால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவளிக்க விரும்புகிறேன். அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது குறித்துதான் கவனம் செலுத்துகிறோம். எங்கள் அணியில் உள்ள திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்று தீபாவளி பண்டிகை: எண்ணெய் குளியல் எடுக்க உகந்த நேரம்!
19 Oct 2025சென்னை, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் எது என்பகு குறித்த தகவலை பார்ப்போம்.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
-
மாதாந்திர பூஜைக்காக நடைதிறப்பு: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
19 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது
19 Oct 2025மேட்டூர் : வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடந்த சில நாட்களாக நீரவரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.
-
தீபாவளி கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான்.
-
பாகிஸ்தானும் - ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
19 Oct 2025தோஹா : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடியார் பின்னால் மக்கள் சக்தியுள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 Oct 2025மதுரை, எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க.
-
விருதுகளில் நம்பிக்கை இல்லை: நடிகர் விஷால்
19 Oct 2025சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
-
2,400 அடி உயரத்திற்கு வெடித்து சிதறியது கிளாவியா எரிமலை..!
19 Oct 2025ஹவாய், கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், தற்போது 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
-
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: உலகளவில் சென்னை மெட்ரோ முதலிடம்
19 Oct 2025சென்னை, அக். 20- உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
-
2026 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் களமிறங்க நெதன்யாகு திட்டம்
19 Oct 2025டெல்அவீவ், இஸ்ரேலில் 2026-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக களமிறங்க அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை(அக்.
-
போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்: ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்யறிவு வீடியோ
-
'பிரதமர் பள்ளிக் கூடங்கள்' திட்டத்தில் இணைகிறது கேரளா: அமைச்சர் தகவல்
19 Oct 2025திருவனந்தபுரம் : பிரதமர் பள்ளிக் கூடங்கள் திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சேலம் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு நா.த.க. வேட்பாளர்களை அறிவித்தார் சீமான் : மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி
19 Oct 2025மேட்டூர் : சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
-
மலைப்பாதையில் பாறை சரிவு: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை
19 Oct 2025திருப்பதி, தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திருப்பதி மலைப்பாதையில்
-
ராமதாஸ்- அன்புமணி வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
19 Oct 2025சென்னை : ராமதாஸ்- அன்புமணி வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தெலங்கானாவில் வருகிறது புதிய சட்டம்: பெற்றோரை கவனிக்காவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் : அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை
19 Oct 2025ஐதராபாத் : பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10–15 சதவீதம் பிடித்தம் செய்யும் சட்டம் கொண்டுவரப்படும் என்றும், அந்த தொகை நேரடியாக பெற்றோரின் கணக்கி
-
காசா மக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும்: அமெரிக்கா திடீர் எச்சரிக்கை
19 Oct 2025நியூயார்க், காசாவில் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறி காசா மக்களின் மீதே தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்
-
அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
19 Oct 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
-
3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ. பயணம்: சைக்கிளில் உலகம் சுற்றும் இளைஞர்
19 Oct 2025பாரீஸ் : சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வந்துள்ளார். அவர் 3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ தொலைவு பயணிக்கிறார்.
-
மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி
19 Oct 2025மொசாம்பிக், மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா கடற்கரையில் நிகழ்ந்த படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலியாகினர்.
-
தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் : பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
19 Oct 2025சென்னை : தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
தொடர் கனமழை எதிரொலி: பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்தது
19 Oct 2025கம்பம் : கனமழையால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் ஒரேநாளில் 6 அடி உயர்ந்தது.
-
உயிர் தப்பிய 25,000 அமெரிக்க மக்கள்.. கரீபியன் கடலில் சம்பவம் குறித்து ட்ரம்ப் விளக்கம்
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
-
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கியது த.வெ.க.
19 Oct 2025சென்னை, கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதியுள்ள விஜய், அவர்களது வங்கிக்கணக்குக்கு ரூ.20 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.