எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
ஐ.பி.எல் தொடரில் சென்னையில் ஞாயிரன்று நடைபெற்ற 46வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்னும், டேரில் மிட்செல் 52 ரன்னும் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் உனத்கட், நடராஜன், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.
213 ரன்கள் இலக்கு...
இதையடுத்து 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஹெட் 13 ரன் மற்றும் அபிஷேக் சர்மா 15 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் டக் அவுட் ஆனார்.
134 ரன்களில் அவுட்...
இதையடுத்து எய்டன் மார்க்ரெம் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் நிதிஷ் ரெட்டி 15 ரன்னிலும், மார்க்ரம் 32 ரன்னிலும், இதையடுத்து களம் இறங்கிய கிளாசென் 20 ரன்னிலும், அப்துல் சமத் 19 ரன்னிலும், ஷபாஸ் அகமது 7 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 5 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 78 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 32 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
வெற்றி குறித்து...
இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நன்றாக உணர்கிறேன். ஈரப்பதமான சூழ்நிலைகளில் 70+ ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நல்ல செயல்பாடு. டாஸ் கிடைக்காதது ஆசீர்வாதமாக அமைந்தது. சதத்தைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. 220+ ரன்கள் அடிக்க வேண்டும் என்று விரும்பினேன். இருப்பினும் கடைசி நேரத்தில் 4 - 5 ஷாட்டுகளை தவற விட்டது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. இன்னிங்ஸ் இடைவெளியின் போது அது வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்துமோ என்று நினைத்து அப்செட்டானேன். நல்லவேளையாக இந்த இலக்கே வெற்றிக்கு போதுமானதாக இருந்தது.
சில தவறுகள்...
கடந்த போட்டியில் நாங்கள் சில தவறுகள் செய்தோம். ஆனால் இப்போட்டியில் எங்கள் பீல்டிங் நன்றாக இருந்தது. இம்பேக்ட் வீரர் விதிமுறையால் வெற்றிக்கான ஸ்கோர் எது என்று தெரிவதில்லை. எனவே எப்போதும் நீங்கள் 20 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுக்க வேண்டும். பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுத்தால் எதிரணியை பின்னோக்கி நடக்க வைக்கலாம். இன்று அதை செய்த தேஷ்பாண்டேவின் கடின உழைப்புக்கு பரிசு கிடைத்துள்ளது. அதே போல ஈரப்பதமான சூழ்நிலையில் ஜடேஜா 22 ரன்கள் மட்டும் கொடுத்தது போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது. சீனியர் வீரர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல முடியாது. எனவே நீங்கள் இருக்கையின் பின்னாடி அமர்ந்து கொண்டு அவர்களது வேலையை செய்ய விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து....
போட்டிக்குப்பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மினஸ் கூறியதாவது:- டி20 கிரிக்கெட் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதுதான். தற்போது இந்த ஐபிஎல் தொடரில் முற்றிலும் புதிய லெவலுக்கு சென்றுள்ளது. இந்த லெவலை அமைக்கும்போது, நாம் உண்மையிலேயே ஆக்ரோஷமாக விளையாடும் சில வீரர்களை பெற்றிருந்தால், அதற்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். மேலும், தொடரில் வெற்றி பெற முடியும்.
சவாலானதாக...
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மிகப்பெரிய அளவில் பந்து வீச்சு ஆப்சனை பெறவில்லை. பந்து ஸ்விங் ஆகும் வகையில் இது டெஸ்ட் கிரிக்கெட் அல்ல. ஆடுகளமும் மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருப்பதில்லை. இதனால் பெரும்பாலான நேரங்களில் முயற்சி செய்வதும், குறைந்த ரன்கள் கொடுக்க முயற்சிப்பதும் விக்கெட் எடுப்பதற்கு சிறந்த வழி. பேட்ஸ்மேன்கள் சிறந்த முறையில் பந்தை அடிக்க தொடங்கிவிட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு சவாலானதாக இருக்கும். அதேவேளையில் 270 முதல் 280 ரன்கள் அடித்துவிட்டால், பந்து வீச்சாளர் சராசரியாக 9 ரன்கள் வரை விட்டுக்கொடுக்க இயலும். இது பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும். நாங்கள் சேஸிங் செய்யும் வகையில் நன்றாக தயாராகி இருந்தோம். ஆனால், இதுவரை எங்களுக்கு சிறந்த வகையில் அமையவில்லை. அந்த விசயத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
16 May 2024சென்னை, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவ
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: வரும் 19-ம் தேதி தொடங்க திட்டம்
16 May 2024நாகை, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 May 2024சென்னை, தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அபராதம் விதித்துள்ளது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல்துறைக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 65 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
16 May 2024சென்னை, செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.