முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      உலகம்
Sri-Lanka 2024-04-30

Source: provided

ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திசாநாயக்க சுவீடனில் தெரிவித்துள்ளார். 

ஸ்வீடன் – ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விடயங்களுக்கு தீர்வு காணும் வரையில் இலங்கை தொடர்ந்து நிலையற்றதாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக எதிரணி அரசியல் தரப்பினர் ஒன்றிணையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் சந்திரிகா, முன்னாள் அதிபர் மஹிந்த மற்றும் அதிபர் ரணில் உள்ளிட்ட அனைத்து எதிர் அணியினரும் ஒரே மேடையில் இணையவுள்ளனர். 

அவர்கள் ஏற்கனவே ஒன்றிணைவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர். 2019-ல் கோத்தபய ராஜபக்சேவுக்கு வழங்கியது போன்ற ஆதரவை தனக்கு வழங்க வேண்டும் என சுவீடன் வாழ் இலங்கை மக்களை அவர் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பில் சுவீடனில் உள்ள இலங்கையர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து