முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி

வியாழக்கிழமை, 2 மே 2024      இந்தியா
Kejiri-Sunita 2024-05-01

Source: provided

புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.

தற்போது, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவால் ரத்து செய்யப்பட்ட டெல்லி கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவாலின் கைதைக் கண்டித்து டெல்லி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மே.7-ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு மக்கள் தங்களின் செய்திகளை எழுதுவதற்காக லஜ்பத் நகரில் இரண்டு வெள்ளை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

டெல்லி மக்கள் முதல்வரை எவ்வளவு நேசிக்கின்றார்கள் என்பதைக் காட்டும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி ஜங்புரா எம்எல்ஏ பிரவீன் குமார் கூறினார். இந்தப் பிரசாரத்தை லப்ஜப் நகரிலிருந்து தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வோம். இந்த கையெழுத்துகளைச் சேகரித்து பாஜகவுக்கு அனுப்புவோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் "ஜெயில் கா ஜவாப் வோட் சே தேங்கே" மற்றும் அரவிந்த் "கெஜ்ரிவால் ஜிந்தாபாத்" என்ற கோஷங்களும் கட்சியினரால் எழுப்பப்பட்டன. முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்ட விதம் குறித்து டெல்லி மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து