எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
மிக கனமழை...
இது குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் 21.05.2024 முடிய பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. நேற்று காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைபொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரியாக 0.72 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகப்படியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 5.35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பின்வரும் 9 மழைமானி நிலையங்களில் கனமழை முதல் மிக கனமழை பதிவாயுள்ளது.
ஆட்சியர்களுக்கு...
தூத்துக்குடி மாவட்டத்தில் இடி மின்னல் தாக்கியதன் காரணமாக ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கனமழையின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 15 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதோடு. 7 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறையினை பின்பற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு 15.5.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை...
மேலும், குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்சொன்ன பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையத்திலிருந்து எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், மீன்வளத் துறை ஆணையர் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று. கடல் அலை குறித்தும், பொதுமக்களுக்கு கடல்சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
3 நாட்களுக்கு...
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி செல் பேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் நேற்று முன்தினமும் (18.05.2024), நேற்றும் (19.05.2024) எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய 9 குழுக்கள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நீலகிரி ஆட்சியர்...
நீலகிரி மாவட்டத்திற்கு 18.5.2024 முதல் 20.5.2024 முடிய மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும் என்றும், சுற்றுலா வருவதை தவிர்க்க எண்ணினால் தவிர்க்கலாம் என்று பொது மக்களது பாதுகாப்பு கருதி நீலகிரி மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதோடு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி செல் பேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –26-01-2026
25 Jan 2026 -
இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
25 Jan 2026புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச
-
உள்துறை அமைச்சர் அமித்ஷா 28-ம் தேதி தமிழ்நாடு வருகை
25 Jan 2026சென்னை, உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார்.
-
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
25 Jan 2026சென்னை, மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின
-
என்ன சூழ்ச்சி செய்தாலும் எந்த அழுத்தத்திற்கும் நான் அடங்கிப் போக மாட்டேன்: த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
25 Jan 2026சென்னை, அழுத்தத்திற்கு அடங்கிப் போகும் ஆள் நான் இல்லை என்று த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ஊழல் செய்யவே மாட்டேன்.
-
தமிழ் மொழியை உயிரெனக் காப்போம்: மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளில் விஜய் பதிவு
25 Jan 2026சென்னை, ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம் என்று மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு விஜய் தெரிவித்துள்ளார். மேலும் த.வெ.க.
-
கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்: பிரேமலதா விஜயகாந்த் தகவல்
25 Jan 2026திருச்செந்தூர், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் என்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் 2026 தேர்தல் நல்ல மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும் என்ற
-
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி: கைப்பற்றிய பகுதிகளை திரும்பி தர ரஷ்யா மறுப்பு
25 Jan 2026அபுதாபி, அபுதாபியில் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலைியல் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யா திரும்பி தர மறுத்துள்ளதாக
-
த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் ராணி வேலுநாச்சியாரின் கதையை சொன்ன விஜய்
25 Jan 2026சென்னை, த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளை ஊக்கும்விக்கும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் ராணி வேலுநாச்சியார் பற்றி குட்டிக்கதை ஒன்று சொன்னார்.
-
டபுள் என்ஜின் எனக்கூறி ஏமாற்ற முடியாது: டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
25 Jan 2026காஞ்சிபுரம், டபுள் என்ஜின் எனக்கூறி இனி தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற முடியாது என்றும் 7-வது முறையாக தமிழகத்தில் தி.மு.க.
-
உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும்: கனடா மக்களுக்கு பிரதமர் கோரிக்கை
25 Jan 2026ஒட்டவோ, அதிபர் ட்ரம்ப் வரி மிரட்டல் காரணமாக கனடா பொருட்களையே வாங்க நாட்டு மக்களுக்கு பிரதமர் கார்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ஜனநாயகத்தின் உணர்வை மதிக்க வேண்டும்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
25 Jan 2026புதுடெல்லி, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்க சிறப்பு முகாம்கள் நிறைவு
25 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
-
இன்று 77-வது குடியரசு தினம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்
25 Jan 2026சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
-
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
25 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நாளை (ஜன., 27ம் தேதி) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
-
வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
25 Jan 2026டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
குஜராத்தில் விபத்து - 6 பேர் பலி
25 Jan 2026காந்தி நகர், குஜராத்தில் நடந்த கோர விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவுடன் தொடரும் உறவு: கனடாவுக்கு 100 சதவீத வரி மிரட்டல் விடுத்தார் ட்ரம்ப்
25 Jan 2026நியூயார்க், சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கி உள்ளனர்: மத்திய அரசு
25 Jan 2026புதுடெல்லி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் பட்டியலில் உள்ள 70 இந்தியக் குற்றவாளிகள் 2024-25 ஆண்டுகளுக்கு இடையில் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள
-
தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய்தான்: த.வெ.க.வின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பேச்சு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய்தான் என்றும், த.வெ.க.வின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் த.வெ.க.
-
ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக வாக்கு: இந்தியாவுக்கு ஈரான் நன்றி
25 Jan 2026தெஹ்ரான், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்கள
-
எத்தனை கட்சிகள் வந்தாலும் தி.மு.க.வின் இண்டியா கூட்டணியை யாராலும் எதுவும் செய்ய முடியாது: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
25 Jan 2026புதுக்கோட்டை, எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் தி.மு.க.
-
ஓ.பன்னீ செல்வத்தின் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணன் த.வெ.க.வில் இணைந்தார்
25 Jan 2026சென்னை, த.வெ.க.வில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் அன்றும், இன்றும், என்றும் இந்திக்கு இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jan 2026சென்னை, அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்காகத் தங


