எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
மிக கனமழை...
இது குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் 21.05.2024 முடிய பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. நேற்று காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைபொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரியாக 0.72 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகப்படியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 5.35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பின்வரும் 9 மழைமானி நிலையங்களில் கனமழை முதல் மிக கனமழை பதிவாயுள்ளது.
ஆட்சியர்களுக்கு...
தூத்துக்குடி மாவட்டத்தில் இடி மின்னல் தாக்கியதன் காரணமாக ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கனமழையின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 15 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதோடு. 7 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறையினை பின்பற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு 15.5.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை...
மேலும், குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்சொன்ன பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையத்திலிருந்து எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், மீன்வளத் துறை ஆணையர் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று. கடல் அலை குறித்தும், பொதுமக்களுக்கு கடல்சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
3 நாட்களுக்கு...
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி செல் பேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் நேற்று முன்தினமும் (18.05.2024), நேற்றும் (19.05.2024) எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய 9 குழுக்கள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நீலகிரி ஆட்சியர்...
நீலகிரி மாவட்டத்திற்கு 18.5.2024 முதல் 20.5.2024 முடிய மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும் என்றும், சுற்றுலா வருவதை தவிர்க்க எண்ணினால் தவிர்க்கலாம் என்று பொது மக்களது பாதுகாப்பு கருதி நீலகிரி மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதோடு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி செல் பேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 7 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-05-2025
23 May 2025 -
தங்கம் விலை சற்று சரிவு
23 May 2025சென்னை: சென்னையில் நேற்று (மே 23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனையானது.
-
அவசரமாக தரையிறங்க இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்
23 May 2025புதுடெல்லி, சேதமடைந்த விமானத்தை தரையிறக்க இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்.
-
நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இ.பி.எஸ். வலியுறுத்தல்
23 May 2025சென்னை: நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
த.வெ.க.வின் சின்னத்தை தேர்வு செய்வதில் தலைவர் விஜய் தீவிரம்
23 May 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை தேர்வு செய்ய அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இனி இனிப்பிலும் கூட 'பாக்' இல்லை: 'மைசூர் ஸ்ரீ’ என மாறிய மைசூர் பாக்
23 May 2025ஜெய்ப்பூர்; இனிப்புகளில் அதிகளவிலான விரும்பிகளைக் கொண்ட மைசூர் பாகின் பெயரை, ராஜஸ்தானின் இனிப்புக்கடைகள் பெயர் மாற்றம் செய்துள்ளது.
-
பாக்.கிற்கு 1 பில்லியன் டாலர் ஏன்? சர்வதேச நாணய நிதியம் விளக்கம்
23 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானுககு 1 பில்லியன் டாலர் வழங்கியது தொடர்பாக நாணய நிதிக்கு விளக்கம் கேட்டுள்ளது.
-
தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்: சிங்கப்பூர் அமைச்சர் அறிவுரை
23 May 2025சிங்கப்பூர், தமிழ் மொழியை மாணவர்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் என சிங்கப்பூர் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
-
அதானி வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு
23 May 2025நெல்லை: டாஸ்மாக் விவகாரத்தை விசாரிப்பது போல், அதானி வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழகத்தில் ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு உறுதி தொடக்கக் கல்வி இயக்ககம் அறிக்கை
23 May 2025சென்னை: தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுகிறார்
23 May 2025புதுடெல்லி: நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று (24ம் தேதி )நடைபெற உள்ளது.
-
கேரளாவில் கொரோனா பாதிப்பு 182 ஆக அதிகரிப்பு - 2 பேர் பலி
23 May 2025திருவனந்தபுரம்: கடந்த 2 நாட்களில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.
-
வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்: ராஜினாமா செய்ய முகமது யூனுஸ் முடிவு
23 May 2025டாக்கா, வங்கதேசத்தில் தேர்தலை விரும்பாத முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
-
சிங்கம்புணரி குவாரி விபத்து: இருவர் கைது; உரிமையாளர் தலைமறைவு
23 May 2025சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
-
தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன்? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
23 May 2025சென்னை: தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
மின்சாரத்துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை: அமைச்சர் சிவசங்கர்
23 May 2025பெங்களூரு: எதிர்வரும் ஐந்து முதல் ஏழாண்டுகளில் மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சோனியா, ராகுலுடன் சந்திப்பு
23 May 2025டெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்புப்படை விரைவு
23 May 2025கோவை: ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்காவுக்கான டெண்டர் வெளியீடு
23 May 2025சென்னை: ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஓகா ஓய்வு: கடைசி வேலை நாளிலும் 10 தீர்ப்பு
23 May 2025புதுடில்லி: ஓய்வுபெறும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.எஸ். ஓகா, மரபை ஒதுக்கி, கடைசி வேலை நாளிலும் 10 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார்.
-
வீழ்த்தவே முடியாத மாவீரர் பெரும்பிடுகு முத்தரையர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்
23 May 2025சென்னை: போர்க்களத்தில் எதிரிகளால் வீழ்த்தவே முடியாத வாகைப்பூ சூடிய மாவீரராக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
வர்த்தகம் முதல் சுற்றுலா வரை வடகிழக்கு மாநிலங்கள் பன்முகத்தன்மை கொண்டவை: பிரதமர் மோடி பெருமிதம்
23 May 2025புதுடெல்லி, வர்த்தகம் முதல் பாரம்பரியம் வரை, ஜவுளி முதல் சுற்றுலா வரை, வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதி என்று பிரதமர் நரேந்திர மோடி தெ
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்கள்: ஜோ ரூட் புதிய சாதனை
23 May 2025நாட்டிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த 5வது வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார்.
முதல் டெஸ்ட்...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நடுவர்களை அறிவித்த ஐ.சி.சி
23 May 2025லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் விவரங்களை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இறுதிப்போட்டி...