முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்

சனிக்கிழமை, 25 மே 2024      தமிழகம்
RN Ravi 2023-04-06

ஊட்டி,ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறவுள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ராஜ்பவன் மாளிகை உள்ளது. இங்கு நாளை 27 மற்றும் நாளை மறுதினம் 28-ம் தேதி துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். 

இதற்காக நேற்று அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையம் சென்று பின்னர் அங்கிருந்து கார் மூலம் நீலகிரிக்கு செல்லும் கவர்னர் தொடர்ந்து சாலை மார்க்கமாக ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு செல்கிறார். 

இதையடுத்து ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி  அதனை தொடர்ந்து நாளை 27 மற்றும் நாளை மறுதினம் 28-ம் தேதிகளில் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள 48 பல்லைக் கழகங்களின் துணைவேந்தர்களும் பங்கேற்கின்றனர். துணை வேந்தர்கள் மாநாடு முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவி வரும் 29-ம் தேதி கோத்தகிரி பகுதியை சுற்றி பார்க்க உள்ளார். 

கவர்னர் ஆர்.என்.ரவி நீலகிரிக்கு வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து