முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை : ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      தமிழகம்
Fairman 2023 06 13

Source: provided

ராமேஸ்வரம் : நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 3 படகையும்   சிறை பிடித்து சென்றனர்.  இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

ராமேஸ்வரம் துறைமுக கடலோரப் பகுதியில் இருந்து  சூறாவளி  காற்று காரணமாக 6 நாட்களாக மீன்பிடி செல்லாமல் மீனவர்கள் இருந்து வந்தனர். இந்த நிலையில் காற்றின் தாக்கம் குறைந்ததையடுத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை காலையில் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்  பிடிக்க கடலுக்குச் சென்றனர். 

 கச்சத்தீவு  அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  இலங்கை கடற்படையினர்  ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன் பிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்ததோடு  ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின்,ரேமண்ட், ஹெரீன் ஆகியோரின் படகுகளை சுற்றி வளைத்தனர். 

அதற்கு பின்னர் படகை சோதனையிட்டு படகிலியிருந்த புரூக்ளின், காளீஸ்வரன், ராஜ் முருகானந்தம், முத்துக்குமார்,சீமான், சர்ப்ரதம் ,கருப்பையா, சுரேஷ்பாபு, காளிதாஸ், ரூபன், கண்ணன், நாகராஜ் ராஜேந்திரன்,ஜெகன், சகாயம், சந்தியா தீபன் ,சுகாதார்,தீபன் குமார் ஆகிய 22 மீனவர்களையும் கைது செய்தனர். 

அதற்கு பின்னர் படகை பறிமுதல் செய்து காங்கேசன்   துறைமுக கடற்படை முகாமிற்கு  அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணை செய்து மீனவர்களை போலீசாரிடம்  ஒப்படைத்தனர். அங்கு போலீசார் மீனவர்களை விசாரணை செய்து எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனையடுத்து ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் அனைத்து மீனவ சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட மூன்று படங்களையும் உடனே விடுவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீனவர்கள் விடுவிக்கும் வரை மீன்பிடிக்க செல்ல கூடாது என முடிவு செய்து இன்று முதல் வேலைநிறுத்தத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து