எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள மூன்றாவது வெண்கலப் பதக்கம் இது.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. 26-ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறும். பிரான்ஸ் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. இதில் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். அவர் 451. 4 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்தார். சீனாவின் ஒய்.கே. லூ 463.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். உக்ரைன் வீரர் குலீஷ் 461 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். ஸ்வப்னில் குசாலேவின் சிறப்பான சாதனை, இந்தியாவை பெருமைப்படுத்தியது மட்டுமல்லாமல், துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் அவரது நிபுணத்துவத்தை எடுத்துரைத்துள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்ற பிறகு ஸ்வப்னிலின் தந்தை தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மனு பாகர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 41-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காலிறுதிக்கு முந்தை சுற்றுக்கு
எச்.எஸ். பிரனாய் முன்னேற்றம்
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரரான எச்.எஸ். பிரனாய் மற்றும் வியட்நாம் நாட்டை சேர்ந்த டுக் பாட் லி ஆகியோர் விளையாடினர். இந்த போட்டியில், 16-21, 21-11, 21-12 என்ற செட் கணக்கில் லியை வீழ்த்தி, பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அவர் காலிறுதிக்கு முந்தின சுற்றில், அடுத்து விளையாட உள்ளார்.
இந்த போட்டியில் இந்திய வீரரான பிரனாயும், மற்றொரு இந்திய வீரரான லக்சயா சென்னும் விளையாட உள்ளனர். இதில் சோகத்திற்குரிய விசயம் என்னவெனில், இந்திய வீரர் ஒருவர் நாளை போட்டியில் இருந்து வெளியேறுவார். எனினும், ஒருவர் காலிறுதிக்கு முன்னேறுவார். இதற்கு முன் நடந்த போட்டியில், இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி. சிந்து மற்றும் லக்சயா சென் இருவரும் முறையே மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தின சுற்றுக்கு முன்னேறினர்.
இந்திய ஹாக்கிஅணி தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 7-வது நாளான நேற்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கிஆட்டத்தில் இந்திய அணி வலுவான பெல்ஜியத்துடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. இருப்பினும் பிற்பாதி ஆட்டத்தில் பெல்ஜியத்தின் கை ஓங்கியது. அந்த அணி அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. இந்திய அணி கடுமையாக போராடியும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. முழு நேர ஆட்ட முடிவில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது.
குசாலேவுக்கு பிரதமர் வாழ்த்து
பாரீஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) துப்பாக்கி சுடுதலின் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்று இந்திய வீரர் சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பாராட்டுகள். ஸ்வப்னில் குசாலே தனது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியதால் பதக்கம் கிடைத்தது. 50 மீட்டர் ரைபிள் பிரிவில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஸ்வப்னில் பெற்றுள்ளார். துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வெல்வது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வீராங்கணைகள் ஏமாற்றம்
7-வது நாளான நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிப்ட் கவுர் சம்ரா மற்றும் அஞ்சும் மோட்கில் கலந்து கொண்டனர். இதில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மோட்கில் 18-வது இடமும், சிப்ட் கவுர் சம்ரா 31-வது இடமும் பெற்று தோல்வியடைந்தனர். இதன் மூலம் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறாமல் ஏமாற்றம் அளித்தனர்.
நிகத் ஜரின் அதிர்ச்சி தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் நிகத் ஜரின் போட்டியிட்டார். உலக சாம்பியனான நிகத் ஜரின், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்தியர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார். அவர், நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனை வு யுவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை வு யுவிடம் 5-0 என்ற கணக்கில் நிகத் ஜரின் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். இதனால் ஒலிம்பிக்கில் நிகத் ஜரினின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஜெர்மனி வீரரான டி. கோபரை எதிர்கொண்டார். இதில் 7-5 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர் காலிறுதியில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
பிரேசில் வீராங்கணை வெளியேற்றம்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பாரீசில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை அன்னா கரோலினா, உரிய அனுமதியின்றி தனது ஆண் நண்பரும் சக நீச்சல் வீரருமான கேப்ரியல் சாண்டோஸ் உடன் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியே சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், கரோலினாவை ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்குவதாகவும், உடனடியாக அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும் பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், கரோலினாவுடன் அவுட்டிங் சென்ற சான்டோஸை இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி எச்சரித்துள்ளது.
இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா தோல்வி
மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினார். ரவுண்ட் ஆஃப் 32இல் 9-11,12-10, 11-4, 11-5, 10-12, 12-10 என்ற கணக்கில் வென்றார். அடுத்து நள்ளிரவு நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் சன் யிங்ஷாவுடன் மோதினார். 26 வயதான இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா நம்.1 வீராங்கனயுடன் சிறப்பாகவே போட்டியிட்டார். இருப்பினும் 10-12, 10-12, 8-11, 3-11 என்ற கணக்கில் ஸ்ரீஜா அகுலா தோல்வியுற்றார்.
நைஜீரிய தலைநகா் லாகோஸில் நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டா் (டபிள்யுடிடி) போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா இரட்டை தங்கம் வென்றிருந்தார். காமன்வெல்த் விளையாட்டிலும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.
சாத்விக்-சிராக் இணை தோல்வி
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 7-வது நாளான நேற்று நடைபெற்ற ஆண்கள் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா- வூ யிக் சோ இணையுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் முதல் செட்டை இந்திய இணை கைப்பற்றியது. ஆனால் அடுத்த 2 செட்டுகளையும் மலேசியா இணை கைப்பற்றி வெற்றி பெற்றது. 1 மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மோதலில் மலேசிய இணை 13-21, 21-14 மற்றும் 21-16 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடிக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த அதிர்ச்சி தோல்வியின் மூலம் சாத்விக் - சிராக் இணையின் ஒலிம்பிக் பதக்க கனவு முடிவடைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
ஓ.பன்னீர்செல்வம் கேள்வியால் குலுங்கி சிரித்த எடப்பாடி பழனிசாமி
17 Mar 2025சென்னை : மாந்திரீக பூஜை குறித்து ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியபோது எடப்பாடி பழனிசாமி குலுங்கி சிரித்தார்.
-
சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமி திரும்புகிறார்: நாசா அறிவிப்பு
17 Mar 2025நாசா : சுனிா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்புவார் என்று நாசா அறிவித்துள்ளது.
-
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் - புதின் இன்று பேச்சுவார்த்தை
17 Mar 2025மாஸ்கோ : உக்ரைன்- ரஷியா இடையேயான போர் நிறுத்த ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தையை அமெரிக்கா அதிபர் நடத்த உள்ளார்.
-
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிப்பு நடைமுறை
17 Mar 2025புதுடெல்லி : வருகிற 1-ம் தேதி முதல் புதிய வருான வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-03-2025.
17 Mar 2025 -
துளசி கப்பார்ட் - அஜித் தோவல் சந்திப்பு
17 Mar 2025டெல்லி : இந்தியா வந்த அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார்.
-
வருணன் விமர்சனம்
17 Mar 2025சென்னை, ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு தரப்பினருக்கும் இடையே தொழில் போட்டி ஏற்படுகிறது.
-
பூஜையுடன் தொடங்கிய யுவன் ராபின் ஹூட்
17 Mar 2025கன்னட திரையுலகைச் சேர்ந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான சந்தோஷ் குமார், இயக்கி தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் யுவன் ராபின் ஹூட்.
-
எனக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை - மம்மூட்டி விளக்கம்
17 Mar 2025கேரளா : எனக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை என்று மம்மூட்டி விளக்கமளித்துள்ளார்.
-
மாடன் கொடை விழா - விமர்சனம்
17 Mar 2025திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுடலை மாட சாமியின் கொடை விழா நடக்கிறது. அப்போது தெருக்கூத்து கலஞரான திருநங்கை ஒருவர் மர்மமாக இறக்கிறார்.
-
தி.மு.க. - அ.தி.மு.க. இடையே காரசார விவாதம்: மடிக்கணினி விவகாரத்தில் இ.பி.எஸ். கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
17 Mar 2025சென்னை : மடிக்கணினி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இ.பி.எஸ்.
-
ராபர் விமர்சனம்
17 Mar 2025படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையை செய்துக் கொண்டிருக்கும் நாயகன் சத்யாவுக்கு, சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது.
-
டெக்ஸ்டர் விமர்சனம்
17 Mar 2025காதலர்களான நாயகன் ராஜீவ் கோவிந்த்தும், நாயகி யுக்தா பெர்வியும், திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கும் நிலையில், யுக்தா பெர்வி கொலை செய்யப்படுகிறார்.
-
ஜார்க்கண்டில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
17 Mar 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட், மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு அருகிலிருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்தது.
-
நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்: சுகாதாரத்துறை
17 Mar 2025சென்னை : நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
-
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் இன்று மாலை பூமிக்கு திரும்புகிறார்
17 Mar 2025வாஷிங்டன் : 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பூமி திரும்பவுள்ளார்.
-
பெருசு விமர்சனம்
17 Mar 2025கிராமம் ஒன்றில் மதிப்பு மிக்க குடும்பத்திலுள்ள உள்ள ஒரு முதியவரின் மகன்கள் சுனில் மற்றும் வைபவ்.
-
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் தோல்வி : தீர்மானத்துக்கு 63 பேர் ஆதரவு - 154 பேர் எதிர்ப்பு
17 Mar 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது.
-
தி.மு.க. - பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி: த.வெ.க. பகீர் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : தி.மு.க. , பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி உள்ளதாக த.வெ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
-
எதிர்க்கட்சியினரை ஏன் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் கேட்டதில்லை: சபாநாயகர்
17 Mar 2025சென்னை : எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் இதுவரை என்னிடம் கேட்டதில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
சுவீட் ஹார்ட் விமர்சனம்
17 Mar 2025நாயகன் ரியோ ராஜ். தனது சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணம், குழந்தை உள்ளிட்ட குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்.
-
சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்த முடிவு
17 Mar 2025புதுடில்லி : சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.
-
உக்ரைனிய ஆயுத படைகளுக்கு புதிய தலைவரை நியமனம் செய்தார் அதிபர் ஜெலன்ஸ்கி
17 Mar 2025கீவ் : உக்ரைனிய ஆயுத படைகளின் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
பாலாற்றின் குறுக்கே ரூ.70 கோடியில் தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்
17 Mar 2025சென்னை : வெண்கோடி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.70 கோடியில் தடுப்பணை அமைக்க திட்டம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் புதிய நீதிபதியாக பதவியேற்ற ஜாய்மல்யா பாக்சி : நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
17 Mar 2025புதுடெல்லி : கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நிதிபதியான ஜாய்மல்யா பாக்சி, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.