எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர் இன்று வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்த தொடரின் நிறைவு விழா இன்று இரவு அரங்கேறுகிறது. நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மற்றும் தடகள வீராங்கனை பிரீத்தி பால் ஆகியோர் ஏந்தி செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய குழுவின் தலைவர் சத்யபிரகாஷ் சங்வான் அறிவித்துள்ளார்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவில் உள்ள ஹூலன்பியர் நகரில் இன்று தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் போட்டியை நடத்தும் சீனா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நாளை சீனாவுடன் மோதுகிறது. 9-ந்தேதி ஜப்பானுடனும், 11-ந் தேதி மலேசியாவுடனும், 12-ந்தேதி தென்கொரியாவுடனும், 14-ந்தேதி பரம எதிரி பாகிஸ்தானுடனும் மோதுகிறது.
40 வயதில் பதக்கம் வென்ற இந்தியர்
பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ஹொகடோ செமா குண்டு எறிதலில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் எஃப்57 பிரிவில் பங்கேற்ற 40 வயதான ஹோகடோ செமா 14.65 மீட்டர் தூரம் குண்டு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இது அவரது அதிகபட்ச சாதனையாகும். இதற்கு முன்பு 13.88 மீட்டர் தூரம் குண்டு எறிந்து கடந்தாண்டு வெண்கல் வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நாகாலாந்து மாநிலத்தில் திமாபூரைச் சேர்ந்தவர் ஹோகடோ செமா. 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவில் சேர ஆசைப்பட்டவர். 2002இல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடைக்கையின்போது கண்ணிவெடி வெடித்து தனது இடது காலை இழந்தார். இதனால் அவரது சிறப்பு அதிரடி படையில் சேரமுடியாமல் போனது. வாழ்க்கையே முடிந்துவிட்டதாக இருந்த வேலையில் தனது சீனியர் அளித்த தன்னம்பிக்கையால் இன்று பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்கிறார். 2016இல் தனது 31 வயதில் குண்டு எறிதல் விளையாட்டில் ஈடுபட்டு அதே ஆண்டு தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டார்.
தொடரை வென்றது ஆஸ்திரேலியா
ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடந்தது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.
தொடர்ந்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 16.4 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 70 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மெக்முல்லன் 59 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் முறையாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையே ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஷ்மத்துலா ஷாஹிடி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் விவரம் வருமாறு., ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), இப்ராஹிம் சட்ரான், ரியாஸ் ஹசன், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, பஹீர் ஷா மஹ்பூப், இக்ராம் அலி கில், ஷாஹிதுல்லா கமால், அப்சர் ஜசாய், அஸ்மத்துல்லா உமர்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஷம்ஸ் உர் ரஹ்மான், கைஸ் அஹ்மத், ஜாஹிர் கான், நிஜாத் மசூத், கலீல் அஹ்மத்.
ஆலி போப் புதிய சாதனை
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 44.1 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் லாரன்ஸ் 5 ரன், டக்கட் 86 ரன், ஜோ ரூட் 13 ரன் எடுத்து அவுட் ஆகினர். ஆலி போப் 103 ரன்னுடனும், ஹாரி புரூக் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலக்கை தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நேற்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆலி போப் சதம் அடித்ததன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தூண் உள்ளது : ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்
16 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
16 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க மத்தி அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
-
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம்: ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
16 Dec 2025மாஸ்கோ, இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
-
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
தங்கம் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்தது
16 Dec 2025சென்னை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
-
அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்: சோனியா காந்தி
16 Dec 2025புதுடெல்லி, அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மாநாடு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
16 Dec 2025வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகிய
-
மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
16 Dec 2025டெல்லி, மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சம் பேர் விவரங்கள் வெளியீடு: ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம்
16 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல்
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு
16 Dec 2025சென்னை, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர்.
-
ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
16 Dec 2025ஈரோடு, ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம் மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அருகில் ரூ.39.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
16 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெ
-
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
16 Dec 2025சென்னை, ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
-
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
‘பெண்டானில்’ ஒரு பேரழிவு ஆயுதம்: முக்கிய உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
16 Dec 2025வாஷிங்டன், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
16 Dec 2025அடிலெய்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 3-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா வெற்றி....
-
ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு
16 Dec 2025அம்மான், ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
-
ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் காரில் பயணம் செய்த பிரதமர் மோடி
16 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு ஒரே காரில் அழைத்து சென்றார்.
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு : விசாரணையை தொடர டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்
16 Dec 2025புது டெல்லி, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை நேரில் சென்று விசாரித்தார் ஆஸி., பிரதமர் அப்பனீஸ்
16 Dec 2025சிட்னி, சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்ட
-
2014 முதல் இந்தியாவிற்குள் ஊடுருவிய 23,926 பேர் கைது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
16 Dec 2025புதுடெல்லி, இந்தியாவில் 2014-ம் ஆண்டு முதல் ஊடுருவிய 23,926 பேரை கைது செய்துள்ளதாக மத்தி அரசு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-12-2025.
17 Dec 2025 -
ஜல்லிக்கட்டு போட்டிகான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது
17 Dec 2025சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.&
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
17 Dec 2025சென்னை, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலை



