எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : கூட்டுறவு தேர்தலை ஏன் தி.மு.க. அரசால் நடத்த முடியவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கூறியதாவது-
தமிழகத்தில் 33, 377 ரேஷன் கடையில் உள்ளது கூட்டுத்துறை என்பது மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கடந்த பத்தாண்டில் இருந்தது. இந்தியாவிலே எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில் மாதம்தோறும் 20 கிலோ அரிசி என்ற திட்டத்தை கடந்த 2011 ஆம் ஆண்டு அம்மா தொடங்கி வைத்தார்கள் நம்மை காட்டிலும் அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கூட இது போன்ற திட்டங்கள் கிடையாது. அதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் பருப்பு, சர்க்கரை, எண்ணை உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு மானியங்களாக வழங்கப்பட்டு வந்தது, அதேபோல் ரேஷன் கடைகளில் மக்களின் தேவைக்கேற்ப பணியாளர்கள் அமர்த்தபட்டனர்.மேலும் பொங்கல் பண்டிகையில் விலையில்லா வேட்டி, சேலை திட்டமும் ,பொங்கல் பரிசு திட்டமும் சிறப்பாக அம்மா ஆட்சிக்கால சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் 2500 ரூபாய் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரேஷன் கடைகளும் சிறப்பாக வழங்கப்பட்டது அதேபோல் மாற்றுத்திறன்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் தேசிய அளவில் கூட்டுறவு துறை விருது பெற்றது.கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 28 விருதை கூட்டுத் துறை பெற்றுள்ளது இதில் இரண்டு முறை ஜனாதிபதி விருதை பெற்றது.
மக்களின் கோரிக்கையை ஏற்று எடப்பாடியார் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் , 20 ரேஷன் கார்டு ,30 ரேஷன் கார்டு உள்ள மலை கிராமம் மற்றும் குக்கிராம பகுதிகளில் அந்தப் பகுதி மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கிட 3501 நகரும் நியாயவிலை கடைகளை செயல்படுத்தப்படும் என்று அறிவித்து, 2020 ஆம் ஆண்டு எடப்பாடியார் திறந்து வைத்தார் இதற்காக 9 கோடி 66 லட்சம் நிதியை வழங்கினார்.தற்போது நகரும் நியாய கடை உள்ளதா? இல்லை அம்மா மினி கிளிக்கை மூடியதை போல மூடு விழா நடத்தி விட்டார்களா?. அம்மா ஆட்சிக்காலத்திலும், எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் இரண்டு முறை கூட்டுறவு தேர்தல் ஜனநாயகம் முறைப்படி நடைபெற்றது, தற்போது கூட்டுறவு தேர்தலை விடியா திமுக அரசு ஏன் நடத்தவில்லை? தற்போது தனி அதிகாரிகளை வைத்து தான் நிர்வாகம் நடைபெறுகிறது.அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் தனியார் வங்கிகளை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டன. தற்போது கடன் வழங்கப்பட்டு வருகிறது அதற்காக மானியங்களை வங்கிகளுக்கு அரசு வழங்கப்படவில்லை. ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியில் இந்த மூன்றாண்டுகளில் கூட்டுறவு துறை சிக்கி சீரழிந்து வருகிறது, விலையில்லா வேட்டி சேலை திட்டத்தில் கூட கடந்த மூன்று ஆண்டுகளாக சரியாக வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகிறார்கள், அதே போல் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கிய புளி, மண்டவெல்லம் ஆகியவை எல்லாம் தரக்குறைவாக இருந்தது அதில் கூட 500 கோடி அளவில் முறைகேடு நடந்ததாக ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டின.கடந்த கூட பொங்கல் பண்டிகையில் மக்களுக்கு கரும்பை கூட வழங்காமல் இரக்கமற்ற அரசாக இருந்தது அதைக் கூட எடப்பாடியார் கடுமையாக கண்டன குரல் கொடுத்த பின்பு தான் கூட்டுறவு துறை மூலம் கரும்பு வழங்கப்பட்டது.
ரேஷன் கடையில் மூலம் ஒரு கிலோ பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பாமாயில் ரூ 25 க்கு வழங்கப்பட்டு வருகிறது, இதனை ஒரு கோடியே 90 லட்சம் குடும்பங்கள் வாங்கி பயன்பெற்றனர், இதே வெளிச்சந்தையில் ஒரு 1 பருப்பு 185க்கும்,பாமாயில் 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இதற்காக ஆண்டுதோறும் 3,800 கோடி ஒதுக்கப்பட்டது, ஆனால் தற்பொழுது சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்ஆகியவை வழங்கப்படவில்லை, இது குறித்து எடப்பாடியார் விரிவான கண்டன அறிக்கை வெளியிட்டு இதற்காக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினார் ஆனாலும் விடியா அரசு இன்னும் இதை சரி செய்யவில்லை. அதேபோல் ரேஷன் கடைகளுக்கு வாடகை ,மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு ஆண்டுதோறும் அரசு மானியமாக வழங்கும், இந்த மானியத்தால் தான் சமாளிக்க முடியும் ஆனால் இந்த மானியங்கள் குறித்த காலத்தில் வரவில்லை இதனால் சங்கங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி திணறி வருகின்றன.
ஆண்டுதோறும் ரேஷன் கடை செலவுக்காக கூட்டுறவு துறைக்கு 450 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கும். ஆனால் கடந்த 2021-2022 ஆண்டு மானியத்தில் 3 சதவீதமும், 2022-2023 ஆண்டு மானியத்தில் 51 சதவீதமும், 2023-2024 ஆண்டில் 40 சதவீதமும் ஆக மொத்தம் 750 கோடி நிலுவையில் உள்ளது .இதனால் ரேஷன் கடை வாடகை, ஊழியர் சம்பளம் போன்ற செலவுகளை செய்ய முடியாமல் சங்கங்கள் திணறி வருகிறது. இன்றைக்கு அரசு பணத்தில் வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலினும், அரசு பணத்தில் கார்ரேஸ் நடத்திய உதயநிதியும் தங்களின் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வருகிறார்கள். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் இந்த கூட்டுறவு துறைக்கு உரிய நிதி வழங்க முன்வர வேண்டும் இல்லை என்றால் ஒட்டுமொத்தமாக மக்கள் உங்களுக்கு 2026 தேர்தலில் பாடம் புகட்ட தயாராக இருக்கிறார்கள், மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அப்போது சீரழிந்திருக்கும் கூட்டுறவுத் துறையை மக்களுக்கு பயன்பெறும் சேவை துறையாக மாற்றுவார் என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –10-01-2026
10 Jan 2026 -
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி, பதாகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Jan 2026சென்னை, குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி மற்றும் பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஜனநாயகன் பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தயாரிப்பு நிறுவனம்
10 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளத
-
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி சி-62: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
10 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி சி-62 நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் ராக்கெட் மாதிரியை வைத்து திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்
10 Jan 2026கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்
10 Jan 2026கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை: பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் விரைவில் தமிழகம் வருகிறார்
10 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் மாதம் தமிழகம் வருகிறார்.
-
வளர்ச்சியடைந்த இந்தியா: மூன்றாயிரம் இளைஞர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
10 Jan 2026டெல்லி, டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத்(வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
10 Jan 2026பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
வார ராசிபலன்
10 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அஷ்டமி சப்பரம், சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய காட்சி.
- மதுரை செல்லத்தம்மன் உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
10 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
10 Jan 2026


