எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : கூட்டுறவு தேர்தலை ஏன் தி.மு.க. அரசால் நடத்த முடியவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கூறியதாவது-
தமிழகத்தில் 33, 377 ரேஷன் கடையில் உள்ளது கூட்டுத்துறை என்பது மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கடந்த பத்தாண்டில் இருந்தது. இந்தியாவிலே எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில் மாதம்தோறும் 20 கிலோ அரிசி என்ற திட்டத்தை கடந்த 2011 ஆம் ஆண்டு அம்மா தொடங்கி வைத்தார்கள் நம்மை காட்டிலும் அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கூட இது போன்ற திட்டங்கள் கிடையாது. அதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் பருப்பு, சர்க்கரை, எண்ணை உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு மானியங்களாக வழங்கப்பட்டு வந்தது, அதேபோல் ரேஷன் கடைகளில் மக்களின் தேவைக்கேற்ப பணியாளர்கள் அமர்த்தபட்டனர்.மேலும் பொங்கல் பண்டிகையில் விலையில்லா வேட்டி, சேலை திட்டமும் ,பொங்கல் பரிசு திட்டமும் சிறப்பாக அம்மா ஆட்சிக்கால சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் 2500 ரூபாய் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரேஷன் கடைகளும் சிறப்பாக வழங்கப்பட்டது அதேபோல் மாற்றுத்திறன்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் தேசிய அளவில் கூட்டுறவு துறை விருது பெற்றது.கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 28 விருதை கூட்டுத் துறை பெற்றுள்ளது இதில் இரண்டு முறை ஜனாதிபதி விருதை பெற்றது.
மக்களின் கோரிக்கையை ஏற்று எடப்பாடியார் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் , 20 ரேஷன் கார்டு ,30 ரேஷன் கார்டு உள்ள மலை கிராமம் மற்றும் குக்கிராம பகுதிகளில் அந்தப் பகுதி மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கிட 3501 நகரும் நியாயவிலை கடைகளை செயல்படுத்தப்படும் என்று அறிவித்து, 2020 ஆம் ஆண்டு எடப்பாடியார் திறந்து வைத்தார் இதற்காக 9 கோடி 66 லட்சம் நிதியை வழங்கினார்.தற்போது நகரும் நியாய கடை உள்ளதா? இல்லை அம்மா மினி கிளிக்கை மூடியதை போல மூடு விழா நடத்தி விட்டார்களா?. அம்மா ஆட்சிக்காலத்திலும், எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் இரண்டு முறை கூட்டுறவு தேர்தல் ஜனநாயகம் முறைப்படி நடைபெற்றது, தற்போது கூட்டுறவு தேர்தலை விடியா திமுக அரசு ஏன் நடத்தவில்லை? தற்போது தனி அதிகாரிகளை வைத்து தான் நிர்வாகம் நடைபெறுகிறது.அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் தனியார் வங்கிகளை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டன. தற்போது கடன் வழங்கப்பட்டு வருகிறது அதற்காக மானியங்களை வங்கிகளுக்கு அரசு வழங்கப்படவில்லை. ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியில் இந்த மூன்றாண்டுகளில் கூட்டுறவு துறை சிக்கி சீரழிந்து வருகிறது, விலையில்லா வேட்டி சேலை திட்டத்தில் கூட கடந்த மூன்று ஆண்டுகளாக சரியாக வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகிறார்கள், அதே போல் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கிய புளி, மண்டவெல்லம் ஆகியவை எல்லாம் தரக்குறைவாக இருந்தது அதில் கூட 500 கோடி அளவில் முறைகேடு நடந்ததாக ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டின.கடந்த கூட பொங்கல் பண்டிகையில் மக்களுக்கு கரும்பை கூட வழங்காமல் இரக்கமற்ற அரசாக இருந்தது அதைக் கூட எடப்பாடியார் கடுமையாக கண்டன குரல் கொடுத்த பின்பு தான் கூட்டுறவு துறை மூலம் கரும்பு வழங்கப்பட்டது.
ரேஷன் கடையில் மூலம் ஒரு கிலோ பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பாமாயில் ரூ 25 க்கு வழங்கப்பட்டு வருகிறது, இதனை ஒரு கோடியே 90 லட்சம் குடும்பங்கள் வாங்கி பயன்பெற்றனர், இதே வெளிச்சந்தையில் ஒரு 1 பருப்பு 185க்கும்,பாமாயில் 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இதற்காக ஆண்டுதோறும் 3,800 கோடி ஒதுக்கப்பட்டது, ஆனால் தற்பொழுது சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்ஆகியவை வழங்கப்படவில்லை, இது குறித்து எடப்பாடியார் விரிவான கண்டன அறிக்கை வெளியிட்டு இதற்காக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினார் ஆனாலும் விடியா அரசு இன்னும் இதை சரி செய்யவில்லை. அதேபோல் ரேஷன் கடைகளுக்கு வாடகை ,மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு ஆண்டுதோறும் அரசு மானியமாக வழங்கும், இந்த மானியத்தால் தான் சமாளிக்க முடியும் ஆனால் இந்த மானியங்கள் குறித்த காலத்தில் வரவில்லை இதனால் சங்கங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி திணறி வருகின்றன.
ஆண்டுதோறும் ரேஷன் கடை செலவுக்காக கூட்டுறவு துறைக்கு 450 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கும். ஆனால் கடந்த 2021-2022 ஆண்டு மானியத்தில் 3 சதவீதமும், 2022-2023 ஆண்டு மானியத்தில் 51 சதவீதமும், 2023-2024 ஆண்டில் 40 சதவீதமும் ஆக மொத்தம் 750 கோடி நிலுவையில் உள்ளது .இதனால் ரேஷன் கடை வாடகை, ஊழியர் சம்பளம் போன்ற செலவுகளை செய்ய முடியாமல் சங்கங்கள் திணறி வருகிறது. இன்றைக்கு அரசு பணத்தில் வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலினும், அரசு பணத்தில் கார்ரேஸ் நடத்திய உதயநிதியும் தங்களின் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வருகிறார்கள். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் இந்த கூட்டுறவு துறைக்கு உரிய நிதி வழங்க முன்வர வேண்டும் இல்லை என்றால் ஒட்டுமொத்தமாக மக்கள் உங்களுக்கு 2026 தேர்தலில் பாடம் புகட்ட தயாராக இருக்கிறார்கள், மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அப்போது சீரழிந்திருக்கும் கூட்டுறவுத் துறையை மக்களுக்கு பயன்பெறும் சேவை துறையாக மாற்றுவார் என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
இதுவரை 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Jan 2026திருவள்ளூர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
-
இ.பி.எஸ்.சுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
ஜன நாயகன், பராசக்தி பட விவகாரம்: பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதம் மாறியுள்ள தணிக்கை வாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
09 Jan 2026சென்னை, ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
-
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை: 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது: வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
09 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட
-
ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
09 Jan 2026டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும
-
வெனிசுலா மீதான தாக்குதல் ரத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
09 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
கோடீஸ்வரர்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
09 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது.
-
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்., தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு
09 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
-
வங்கதேசத்தில் இந்து வாலிபர் கொலை: முக்கிய குற்றவாளி கைது
09 Jan 2026டாக்கா, வங்கதேசத்தில் இந்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது யாசின் அராபத் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
கரூர் நெரிசல் விவாகரம்: மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு
09 Jan 2026கரூர், கரூர் பலி சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடையியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
பொதுச்செயலாளர் பதவி: இ.பி.எஸ்.க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
09 Jan 2026புதுடெல்லி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
டெல்லியில் ஜன.21-ல் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு
09 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர்களின் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
-
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப்பில் பெறலாம் தமிழ்நாடு அரசு புதிய தகவல்
09 Jan 2026சென்னை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஜன.12-ல் ஆஜராகிறார் விஜய்
09 Jan 2026சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்.
-
நியூசி.,க்கு எதிரான தொடர்: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்..!
09 Jan 2026புதுடெல்லி, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று த
-
வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கும்
09 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே இ
-
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: பார்லி., ஜனவரி 28ல் கூடுகிறது; பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்
09 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
09 Jan 2026சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
09 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் காட்சி, மாலை தந்தப்பரங்கி நாற்காலியில் புறப்பாடு.


