எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் வருகிற 10-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், காயம் காரணமாக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜோகோவிச் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கு ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால், காயம் காரணமாக தற்போது என்னால் அதில் பங்கேற்க முடியவில்லை. என்னை அந்தப் போட்டியில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். போட்டியில் பங்கேற்கும் இதர வீரர்களுக்கு வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.
_____________________________________________________________________________________
ஆஸி., அணிக்கு புதிய கேப்டன்
கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் டி20 அணியை கேப்டன் பெயரில்லாமல் அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக மிட்செல் மார்ஷ் டி20 அணிக்கு கேப்டனாக இருக்கிறார். இந்நிலையில், 29 வயதாகும் விக்கெட் கீப்பர் பேட்டரான ஜோஷ் இங்லிஷ் புதிய டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20க்கு மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் இங்லிஷ் கேப்டனாக செயல்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது. பார்டர்- கவாஸ்கர் கோப்பை தயாரிப்புக்காக பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் 3ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடட்டார்கள் என்பதால் இங்லிஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மிட்செல் மார்ஷ், டிராவிஷ் ஹெட் தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவிட இருப்பதால் டி20 கேப்டனாக இந்தத் தொடருக்கு மட்டும் இங்லிஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் 14ஆவது டி20 கேப்டனாகவும் 30ஆவது ஒருநாள் கேப்டனாகவும் இங்லிஷ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் தேசிய அணித் தலைவர் ஜார்ஜ் பெய்லி, “ஜோஷ் இங்லிஷ் ஒருநாள், டி20 அணியில் விளையாடுபவர். களத்திலும் களத்துக்கு வெளியேவும் மிகவும் மதிக்கத்தக்க வீரராக இருக்கிறார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா ஏ அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். ஷார்ட், ஜாம்பா, மேக்ஸ்வெல், ஸ்டாயினிஸிடமிருந்து இவருக்கு நல்ல ஆதரவும் கிடைத்துள்ளது. மூத்த வீரர்களுக்கு பதிலாக 3ஆவது ஒருநாள் போட்டியில் சேவியர் பார்ட்லெட், ஸ்பென்சர் ஜான்சன், ஜோஷ் பிலிப் அணியில் இணைந்துள்ளார்கள்” எனக் கூறினார். முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. முதல் டி20 தொடர் நவ.14ஆம் தேதி தொடங்குகிறது.
_____________________________________________________________________________________
ஏலம்: பென் ஸ்டோக்ஸ் விலகல்
ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது. இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் மெகா ஏலம் நடைபெறும். அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.
இந்நிலையில், ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார் . ஏலத்தில் 1,574 வீரர்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் பெயர் இடம்பெறவில்லை. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2023-ம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் விளையாடினார். ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்ற புதிய விதி உள்ளது. இதனால் பென் ஸ்டோக்ஸ் இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாட முடியாது.
_____________________________________________________________________________________
ஐ.பி.எல். ஏலத்தில் ஆண்டர்சன்
ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது. இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் மெகா ஏலம் நடைபெறும்.
இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ. 1.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டியில் கடைசியாக 2014ம் ஆண்டு ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
_____________________________________________________________________________________
ரோகித் சர்மா குறித்து ஸ்ரீகாந்த்
ரோகித் சர்மாவின் கேப்டன்சி எதிர்மறையாக, தற்காப்பு உத்தியுடன் இருக்கிறது, அட்டாக்கிங் ஆக இல்லை என்ற விமர்சனங்களை வர்ணனையில் ரவி சாஸ்திரி, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கவாஸ்கர் உள்ளிட்டோர் வைத்தனர். பேட்டிங்கில் ‘லேசி எலிகன்ஸ்’ என்று கூறப்படும் ரோகித் சர்மா அலட்சியமாக ஆட்டமிழந்து இந்திய அணியை 3-0 என்ற முற்றொழிப்பு தோல்விக்கு இட்டுச் சென்றது ரசிகர்கள் மத்தியில் கடும் ஆவேசங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும்போது, “முன்னோக்கிச் சிந்திக்க வேண்டும். ரோகித் சர்மா நன்றாக ஆடவில்லை எனில் அவர் ஓய்வு பெறுவது நல்லது. அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆடுவார்.
ரோகித் சர்மாவுக்கு வயதாகி வருகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆனால் தான் தொடர் முழுதும் மோசமாக ஆடியதாகவும் மோசமாக கேப்டன்சி செய்ததாகவும் ரோகித் சர்மாவே ஒப்புக்கொண்டதற்காக அவருக்கு ஹேட்ஸ்-ஆஃப். இப்படி ஒப்புக்கொள்ளுதல்தான் ஒரு வீரர் தன்னுடைய ரிதமுக்குத் திரும்புவதன் முதல் படி. நம் தவறுகளை ஒப்புக் கொள்வது முக்கியமானது. மனிதர்களுக்கு மிகவும் அவசியமான ஒரு குணம் ஆகும் அது. ரோகித் சர்மா வெளிப்படையாக தன் குறைகளை ஒப்புக் கொண்டுள்ளார். இது அவர் தன்னை மீட்டெடுப்பதற்கான பாதையில் செல்லப் போகிறார் என்று அர்த்தம். இது என்னுடைய கருத்து.” இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம்
12 Jul 2025மும்பை : யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள்: தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
தனியார் பால் நிறுவன மேலாளர் மரணம் தற்கொலையே: சென்னை காவல் ஆணையர்
12 Jul 2025சென்னை : தனியார் பால் நிறுவனத்தில் கருவூல மேலாளர் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்: இ.பி.எஸ். உறுதி
12 Jul 2025சென்னை : ''வரும் சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
லாக் அப் மரணங்கள்: விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
12 Jul 2025சென்னை, லாக் அப் மரணங்கள் தொடர்பாக, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.