எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதலாவது டெஸ்டில் ரோகித் சர்மா இல்லாததால் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் விளையாடினார். தற்போது ரோகித் சர்மா அணிக்கு திரும்பி விட்டதால் 2-வது டெஸ்டில் அவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் லோகேஷ் ராகுல் பின்வரிசைக்கு தள்ளப்படுவார் இந்நிலையில், இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து ராகுல் கூறியதாவது, பேட்டிங்கில் எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன். ஆடும் லெவனில் இடம் கிடைத்தால் போதும். அது எந்த இடமாக இருந்தாலும் சரி, களம் கண்டு அணிக்காக பங்களிப்பு அளிக்க விரும்புகிறேன். இந்திய அணிக்காக பல வரிசையில் விளையாடி இருக்கிறேன்.
தொடக்க காலங்களில் முதல் 20-25 பந்துகளை எதிர்கொள்வது தொழில்நுட்ப ரீதியாக இல்லாமல் மனரீதியாக சற்று சவாலாக இருந்தது. எப்போது அதிரடி காட்ட வேண்டும்?, எவ்வளவு நேரம் எச்சரிக்கையாக ஆட வேண்டும்? போன்ற விஷயங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் பல இடங்களில் விளையாடி பழக்கப்பட்டு விட்டதால், எனது இன்னிங்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற திட்டம் என்னிடம் இருக்கிறது. நான் தொடக்க வீரராக விளையாடினாலும் சரி, மிடில் வரிசையில் விளையாடினாலும் சரி, முதல் 30-40 பந்துகளை சமாளித்து விட்டால், அதன் பிறகு எளிதாக ஆட முடியும். அதில் எனது கவனத்தை செலுத்த முயற்சிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நடத்தப்படுகிறது. இந்த டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் ஆடும் அணி (பிளேயிங் 11) அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 10 பேர் மாற்றமின்றி தொடருகின்றனர். ஒரே மாற்றமாக காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஸ்காட் போலந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் 11 விவரம் பின்வருமாறு., உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் மற்றும் ஸ்காட் போலந்து.
பாகிஸ்தான் அணி அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.இந்த தொடர் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன் ), அப்ரார் அகமது, பாபர் அசாம், ஹாரிஸ் ரவுப், ஜஹந்த் கான், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ஹஸ்னைன், முஹம்மது இர்பான் கான், உமைர் பின் யூசுப், சைம் அயூப், சல்மான் அலி அகாடி, சுஹீன் அலி ஆகா, மொகிம், தயப் தாஹிர் மற்றும் உஸ்மான் கான் .
ஆஸ்திரேலியா அபார வெற்றி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஷட்டின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் ஹர்லீன் தியோல் (19 ரன்கள்), ஹர்மன்ப்ரீத் கவுர் (17 ரன்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (23 ரன்கள்) மற்றும் ரிச்சா கோஷ் (14 ரன்கள்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை.
வெறும் 34.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா 100 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக மேகன் ஷட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 101 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன லிட்ச்பீல்ட் மற்றும் ஜார்ஜியா வால் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். வெறும் 16.2 ஓவர்களிலேயே 102 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜார்ஜியா வால் 46 ரன்களும், லொட்ச்பீல்ட் 35 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ரேனுகா சிங் 3 விக்கெட்டுகளும், பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவு
16 Jan 2025ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். தி.மு.க. - நா.த.க வேட்பாளர்கள் இன்ரு மனுதாக்கல் செய்கின்றனர்.
-
ஆந்திராவில் சேவல் சண்டை போட்டியில் பங்கேற்காத சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு
16 Jan 2025அமராவதி, ஆந்திராவில் சேவல் சண்டை போட்டியில் பங்கேற்காத சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு கிடைத்துள்ளது.
-
ரூ.500-க்கு கேஸ், 300 யூனிட் இலவச மின்சாரம்: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி
16 Jan 2025புதுடெல்லி, டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயு ரூ.500-க்கும், 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இலவச ரேஷன் கிட் வழங்கப்படும் என்று காங்ரஸ் கட்சி தெரிவித
-
கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
16 Jan 2025சென்னை, கருணாநிதி அறக்கட்டளை சார்பில், நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை கடந்த 16-ம் தேதி 
-
பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சி: நடிகர் சைப் அலிகானுக்கு மர்மநபர் சரமாரி கத்திக்குத்து
16 Jan 2025மும்பை, மும்பையில் பிரபல நடிகர் சைப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார்.
-
7 மாதங்களில் மட்டும் அயோத்தி ராமர் கோவிலில் 183 கோடி ரூபாய் காணிக்கை
16 Jan 2025புதுடெல்லி, அயோத்தி ராமர் கோவிலில் ஏழு மாதங்களில் ரூ.183 கோடி அளவில் காணிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதில் வெள்ளி, தங்கம் மற்றும் ரொக்கம் அடங்கும்.
-
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
16 Jan 2025புதுடெல்லி, விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதிய குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
16 Jan 2025புது தில்லி, அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
உ.பி. மகா கும்பமேளாவில் முட்கள் மீது படுத்து ஆசி வழங்கும் துறவி
16 Jan 2025பிரயாக்ராஜ், உத்தர பிரதேச மகா கும்பமேளாவிற்கு வந்திருந்த துறவி ஒருவர், முட்கள் மீது படுத்து மக்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
-
சந்திரயான் - 4 திட்டத்திற்கு ஸ்பேடெக்ஸ் வெற்றி உதவும்: மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
16 Jan 2025பெங்களூரு, ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
-
பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
16 Jan 2025சென்னை, நாமக்கல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகாவில் கொள்ளை சம்பவம்: வங்கி ஊழியர் சுட்டுக்கொலை
16 Jan 2025பெங்களூரு, கர்நாடகாவில் வங்கி முன்பு நடந்த கொள்ளை சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
உத்தர பிரதேசம், வாரணாசியில் பிப். 15-ல் தொடங்குகிறது காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி: அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
16 Jan 2025புது டில்லி, மூன்றாம் ஆண்டு காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெறவுள்ளது என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்ம
-
ஒரு பவுன் தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை கடந்தது
16 Jan 2025சென்னை, தங்கம் விலை நேற்று (ஜன.16) மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்தது. இது நகை வாங்கும் சாமானியர்கள் மற்றும் இல்லதரசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல் படை தாக்குதல்: காசாவில் 65 பேர் உயிரிழப்பு
16 Jan 2025காஸா, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 65 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.2.30 லட்சத்துக்கு விற்பனையான புத்தர் வடிவிலான டிரம்ப் சிலைகள்
16 Jan 2025பெய்ஜிங், புத்தர் வடிவிலான டொனால்டு டிரம்ப் சிலைகள் ஆன்லைனில் ரூ.2.30 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டன.
-
ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் போட்டியிட முதல்வர் சந்திரபாபு நிபந்தனை
16 Jan 2025ஐதராபாத், ஆந்திர மாநிலத்தில் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் அல்லது மேயராக முடியும் என்று அந்த மாநில முதல்வர் என
-
போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சி: ரவுடி பாம் சரவணன் மீது போலீசார் துப்பாக்கி சூடு
16 Jan 2025சென்னை, காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடி பாம் சரவணனை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.
-
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோவுக்கு அண்ணாமலை வாழ்த்து
16 Jan 2025சென்னை, இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் உள்ளூர் ஜாம்பவான்கள்: கிரிக்கெட் வாரியம் புதிய திட்டம்
16 Jan 2025மும்பை, இந்திய பயிற்சியாளர்கள் குழுவில் மேலும் சிலரை சேர்க்க குறிப்பாக உள்ளூர் ஜாம்பவான்களை சேர்க்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கோவையில் யானை தாக்கி விவசாயி பலி
16 Jan 2025கோவை, கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார்.
-
நடிகர் சயிப் அலிகான் மீது தாக்குதல்: மேற்குவங்க முதல்வர் மம்தா கவலை
16 Jan 2025கொல்கத்தா, நடிகர் சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதலில் வேதனை அடைந்ததாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
16 Jan 2025மதுரை, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்
16 Jan 2025வாஷிங்டன், அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.;
-
சயீப் அலிகான் வீட்டுக்குள் வெளிநபர் நுழைந்தது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்
16 Jan 2025மும்பை, சயீப் அலிகானை, கத்தியால் குத்திய குற்றவாளி வீட்டின் அவசரகால பயன்பாட்டுக்கான படிகட்டு வழியாக அவரது வீட்டுக்குள் ஏறி வந்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளன