எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கொல்கத்தா : நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9-ம் தேதி அதிகாலையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். மாநில போலீசார் அவரை கைது செய்தனர்.
எனினும் இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்டு 13-ம் தேதி உத்தரவிட்டது. இதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து 14-ம் தேதி முதல் விசாரணையை தொடங்கினர். மறுபுறம் இந்த விவகாரத்தில், தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டும், ஆஸ்பத்திரிகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க சிறப்புக்குழு ஒன்றை நியமித்தது.
பணியில் இருந்த பெண் டாக்டர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொடூர செயலை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ சங்கங்கள் போராட்டங்கள் நடத்தின. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் என பல நாட்கள் போராட்டம் நீடித்தது.
பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் மேற்கு வங்காளத்தில் தீவிர போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு சீல்டா மாவட்ட கூடுதல் மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ம் தேதி நிறைவடைந்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் போல நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சியல்டா கோர்ட் வழங்கும் தீர்ப்புக்காக நாடே எதிர்பார்த்திருந்தது.
இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து கோர்ட்டின் வாசல் கதவை தட்டுவோம் என கூறியுள்ள பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில், மரபணு பரிசோதனை அறிக்கையில், ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறார் என குறிப்பிடப்படவில்லை. சம்பவத்தின்போது, 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால், நாங்கள் சற்று ஆறுதலாக உணர்வோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, நாங்கள் தொடர்ந்து கோர்ட்டின் கதவை தட்டுவோம். நாட்டு மக்களின் ஆதரவையும் நாங்கள் கோருவோம் என்று கூறினார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்தனர். நீதிபதி அனிர்பன் தாஸ் தனது தீர்ப்பில், சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பிஎன்எஸ் பிரிவுகள் 64, 66 மற்றும் 103(1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி. இதற்கு அதிகபட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையும் இருக்கும் என்று அறிவித்தார். குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் நாளை (20-ம் தேதி) அறிவிக்கப்படும் என்று கோர்ட் தெரிவித்துள்ளது.
அப்போது, “நான் இதைச் செய்யவில்லை. இதைச் செய்தவர்கள், ஏன் கைது செய்யப்படவில்லை?” என்று சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் கூறினார். அக்டோபர் 7, 2024 அன்று இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சீல்டாவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தினசரி விசாரணையை நடத்தியது. விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. ஒரே குற்றவாளி சஞ்சய் ராய் என்று சி.பி.ஐ. ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-02-2025.
14 Feb 2025 -
துரோகிகள் குறித்த பேச்சுக்கு செங்கோட்டையன் விளக்கம்
14 Feb 2025ஈரோடு : துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவில் 2 புதிய இந்திய தூதரகங்கள் பிரதமர் மோடி அறிவிப்பு
14 Feb 2025வாஷிங்டன்:இந்திய - அமெரிக்க மக்களுக்கு இடையிலான மெகா உணர்வு நமது இலக்குகளுக்கு புதிய பரிமாணத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவி
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
14 Feb 2025சென்னை : சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
6 மாத காலம் அமைதியாக இருங்கள்: ஓ.பி.எஸ்.,சை கட்சியில் சேர்க்க ராஜன் செல்லப்பா நிபந்தனை
14 Feb 2025மதுரை: ஆறு மாத காலம் அ.தி.மு.க.-வுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் அமைதியாக இருந்தால் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து நடவடிக்கை எடுப்போம்
-
சீன எல்லை விவகாரத்தில் ட்ரம்ப்பின் மத்தியஸ்த முயற்சி: நாசூக்காக தவிர்த்தது இந்தியா
14 Feb 2025வாஷிங்டன் : சீனா உடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவ தயார் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அந்த உதவியை இந்தியா தவிர்த்துள்ளது.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர்
14 Feb 2025புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் இந்தியாவுக்கு வருகின்றனர்.
-
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு
14 Feb 2025இஸ்லாமாபாத் : நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை: அரசு மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
14 Feb 2025சென்னை : மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காத தி.மு.க. அரசு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
சென்னையில் வேல் யாத்திரை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு
14 Feb 2025சென்னை : சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி : உயர் நீதிமன்றம் உத்தரவு
14 Feb 2025கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் பர்த்வான் மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது. இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.
-
தமிழக மீனவர்கள் பிரச்சினை: ராமேசுவரத்தில் தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்
14 Feb 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தி.மு.க. சார்பாக நாளை (பிப்.16-ம் தேதி), ர
-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு : மத்திய அரசு உத்தரவு
14 Feb 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
-
மார்ச் 6-ம் தேதி செட் தகுதித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
14 Feb 2025சென்னை : கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான செட் தகுதித்தேர்வு மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
-
அ.தி.மு.க. வாக்கு சதவீதம் குறைந்ததா? - முன்னாள் அமைச்சர் சிவபதி மறுப்பு
14 Feb 2025சென்னை : அ.தி.மு.க. பின்தங்கியதாக கூறப்படும் கருத்துக்கணிப்புகளுக்கு முன்னாள் அமைச்சர் சிவபதி மறுப்பு தெரிவித்துள்ளார்,
-
புல்வாமா தாக்குதல் தினம்: உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர், உள்துறை அமைச்சர் புகழாரம்
14 Feb 2025புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு இதே நாளில் (பிப்.14) ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்.
-
வங்கதேசம் குறித்த கவலையை ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி
14 Feb 2025வாஷிங்டன்: வங்கதேச நிலைமை குறித்த தனது கவலையை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொண்டார் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது
-
இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தகத்தை 2030-க்குள் 500 பி.டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் சந்திப்பில் முடிவு
14 Feb 2025வாஷிங்டன்: பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பில், வரும் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ.
-
இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது : அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து
14 Feb 2025வாஷிங்டன் : இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூரில் விமான சாகச நிகழ்ச்சி நிறைவு
14 Feb 2025பெங்களூரு : பெங்களூரில் ஏரோ இந்தியா 2025 என்ற விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
-
இந்தியாவிற்கு எப்-35 ரக விமானங்களை வழங்குகிறது அமெரிக்கா: டிரம்ப் தகவல்
14 Feb 2025வாஷிங்டன் : அமெரிக்கா இந்தியாவிற்கு எப் 35 ரக ஜெட் விமானங்களை வழங்கும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்
14 Feb 2025கீவ் : ரஷியா டிரோன் தாக்குதலில் உக்ரைன் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது உடனே மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
-
நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா? - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி
14 Feb 2025பெர்லின் : புதினை டிரம்ப் சந்திப்பதற்கு முன்னர், டிரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
-
மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது
14 Feb 2025இம்பால் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
-
திருமணத்திற்கு செல்வதில் தகராறு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
14 Feb 2025லக்னோ : திருமணத்திற்கு செல்வதில் ஏற்பட்ட தகராறில் கணவன்- மனவைிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.