எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரைச் சந்திக்க விஜய்க்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. கே.சண்முகம் தெரிவித்தார்.
விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திங்கள்கிழமை (ஜன. 20) சந்திக்க இருப்பதாக அந்தக் கட்சியின் மாநில பொருளாளர் வெங்கட்ராமன் கூறினார். இதற்காக அவர், கட்சி நிர்வாகிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. கே.சண்முகத்தை சனிக்கிழமை சந்தித்து, நடிகர் விஜய் பரந்தூரில் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரைச் சந்திக்க இருப்பதால் பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி மனு அளித்தார்.
பின்னர், அவர் கூறுகையில், பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியைச் சேர்ந்த 13-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர். குறிப்பாக, முற்றிலும் பாதிக்கப்படும் பரந்தூர் மக்கள் நீண்ட நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை (ஜன. 20) காலை தவெக கட்சித் தலைவர் விஜய் விமான நிலைய எதிர்ப்புக் குழு நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளை ஏகனாபுரத்தில் சந்தித்து பேச உள்ளார். இந்தச் சந்திப்புக்கு காவல் துறை எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வர் என்றார்.
இது குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் கூறுகையில், தேவையில்லாத நபர்கள், வெளி நபர்கள் அதிகம் வராமல் பார்த்துக் கொள்ளும்படியும், குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பை முடிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறோம். மற்றபடி எந்தவிதக் கட்டுப்பாடுகளோ, நிபந்தனைகளோ விதிக்கவில்லை என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


